search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adultery"

    • மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • உறையூர் பகுதியில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம்
    • புரோக்கர் அதிரடி கைது செய்யப்பட்டு உள்ளார்

    திருச்சி,

    திருச்சி உறையூர் ஏ.யூ.டி. காலனி பி. வி.குடோன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 27). இவர் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. பின்னர் முகமது அசாருதீனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தது
    • தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடும் பணி தீவிரம்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர் மாவட்ட த்தில் உள்ள அனை த்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தப்பட்டது.

    அப்போது ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மசாஜ் சென்டர் மேலாளரான ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 41) என்பவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்து வெளி மாநிலங்களை சேர்ந்த 4 பெண்கள், திருப்பூர் மாவ ட்டத்தை சேர்ந்த ஒரு பெண், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் என 20 வயது முதல் 26 வயதுடைய 6 இளம்பெ ண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    மசாஜ் சென்டரின் உரிமையாளர் கோவையைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர் போல் சென்ற ஒரு வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தி 6 பெண்களை மீட்டுள்ளனர். இதைப்போல் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களிலும் இனி வரும் காலங்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    முதலில் போதை கும்பலை ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்ய ப்பட்டனர். அதைத்தொடர்ந்து கள்ளச்சாரையும் விற்பவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • அறந்தாங்கியில் 4 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி எல் என் புரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பேரை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர். அதனையடுத்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டு ஆவுடையார்கோவில் ரீக்கோ காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 பேர் கைது
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாச்சல் பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண் கள் உள்பட 5 பேரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநி லத்தை சேர்ந்த 43 வயது பெண், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், ஆம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது.

    இவர்களை வைத்து விபசார தொழில் செய்தது ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் தீபக் (வயது 20) மற்றும் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி மேனகா (29), ராதிகா, ராகுல் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக் மற்றும் மேனகா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராதிகா, ராகுல் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது
    • வெளிமாநில அழகி உட்பட 3 பேர் மீட்பு

    திருச்சி,

    திருச்சி கண்டோ ன்மெண்ட் கலெக்டர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விபச்சார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது பாலியலில் இளம் பெண்களை ஈடுபடுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் மூன்றாவது தெரு அடைக்கல அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த விவேக் கிருஷ்ணன் (வயது 29)என்பவரை கைது செய்தனர். அவரது பிடியில் இருந்த ஹரியானா மாநிலம் செக்க சிக்கா கெய்தால் பகுதியைச் சேர்ந்த 48 வயது அழகி மற்றும் திருச்சியில் லால்குடி திருச்சி இடுமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 38 மற்றும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் ஆகிய மூன்று பேரை போலீசார் மீட்டனர் அவர்கள் வசம் இருந்து 5 செல்போன்கள் மட்டுமல்லாமல் ரூ.5000, ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது

    • தில்லை நகர் பகுதியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்
    • 2 இளம் பெண்கள் மீட்பு

    திருச்சி, 

    திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஸ்பா எனும் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக திருச்சி இ.பி. ரோடு தையல்காரை தெருவை சேர்ந்த சபிக் முகமது தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி கருமண்டபம் ஆர். எம்.எஸ். காலனி 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த பூபதி சஞ்சய் ( வயது 28) என்பவர் இரண்டு இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பூபதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம்

    வாடிக்கையாளர்களுக்கு வலை வீச வைத்திருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர் .மீட்கப்பட்ட பாண்டிச்சேரியை சேர்ந்த 25 மற்றும் 23 வயது உடைய இரண்டு இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கைதான பூபதி மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆறுமுகம் மற்றும் கவிதா இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர்.
    • ஆறுமுகம் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் பட்டாணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தார். இதேபோல விருத்தாசலம் அருகேயுள்ள முருகன்குடியை சேர்ந்த கவிதா (28). இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர். ஆறுமுகத்தின் பட்டாணி கடைக்கு உளுந்தூர்பேட்டை பு.கிள்ளனூரை சேர்ந்த வைத்தி (55) அடிக்கடி வந்து சென்றார். இதில் வைத்திக்கும், கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை ஆறுமுகம் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வைத்தியும், கவிதாவும் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கவிதா தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக ஆறுமுகத்திடம் கூறிச் சென்றார். ஆனால், அவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள வைத்தி வீட்டில் சென்றது ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆறுமுகம் கவிதாவை எரித்துக்கொல்ல முடிவெடுத்து பெட்ரோல் பாட்டிலுடன் உளுந்தூர்பேட்டைக்கு சென்றார். அங்கு வைத்தியின் வீட்டில் இருந்த கவிதாவின் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். அங்கிருந்த வைத்தி பாட்டிலை பிடுங்கி ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஆறுமுகம் முற்றிலும் எரிந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் வைத்திக்கும் லேசான தீக்காயங்களுடன் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் கவிதா, வைத்தி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மேலாளர் கைது
    • வாலிபருக்கு எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் காந்திரோடு, பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்ப தாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள விடுதி களில் அதிரடியாகசோதனை செய்தனர்.

    அப்போது பாபுராவ் தெரு வில் உள்ள தங்கும் விடுதியின் அறை ஒன்றில் இளம்பெண்ணும், வாலிபரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    போலீசாரின் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கும் விடுதியை குத்தகை எடுத்து நடத்தி வருவதும், அங்கு மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    • கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவ ருக்கும் திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் அவரது கணவர் அவரையும், பிள்ளைகளையும் விட்டு சென்று விட்டதாக விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரின் மாமியார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் உள்ளிட்டவர்கள் தம்மை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு தன்னுடன் இணைந்து வாழ வைக்க வேண்டும் என்ற தனது 7 வயது மகன் மற்றும் உறவினர்களுடன் வந்து முனியம்மாள் புகார் அளித்தார்.

    வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பெண் ஊழியரை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரியில் பஸ் நிலையத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இன்று பகல் 12 மணி அளவில் இந்த நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் சென்றார்.

    அந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவரின் அருகில் சென்றார். அந்த ஊழியரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த பெண், வாலிபரை திட்டியபடி அவரை பிடிக்க நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    இதை கண்டதும் அந்த வாலிபர், வடசேரி பஸ் நிலைய பகுதிக்குள் ஓடினார். அந்த பெண்ணும் விடாமல் துரத்தினார்.

    ஒரு வாலிபரை பெண் ஒருவர் துரத்தி செல்வதை கண்டதும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கி பிடித்தனர்.

    வாலிபர் பிடிபட்டதும், அந்த பெண்ணும் அங்கு வந்து விட்டார். அவர் அந்த வாலிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பயணிகளிடம் கூறினார். மேலும் அவர் பணம் தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறி அழுதார்.

    பெண் கூறியதை கேட்டதும் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பிடிபட்ட வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் இச்சம்பவம் பற்றி அவர்கள் வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்ததும், அவர்களிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

    வாலாஜா அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் பிடித்தனர். விடுதி மேலாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வாலாஜா பகுதிகளில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாலாஜா பைபாஸ் ரோட்டில் வன்னிவேடு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக திமிரி, பள்ளிப்பட்டு, காஞ்சீபுரம் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    இது தொடர்பாக வாலாஜா அடுத்த குடிமல்லூரை சேர்ந்த வினோத் (வயது 28), விடுதி மேலாளர் மணி (62) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிடிபட்ட 3 பெண்களையும் காப்பத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×