search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகை வீடு எடுத்து விபசாரம்
    X

    வாடகை வீடு எடுத்து விபசாரம்

    • 2 பேர் கைது
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாச்சல் பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண் கள் உள்பட 5 பேரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநி லத்தை சேர்ந்த 43 வயது பெண், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், ஆம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது.

    இவர்களை வைத்து விபசார தொழில் செய்தது ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் தீபக் (வயது 20) மற்றும் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி மேனகா (29), ராதிகா, ராகுல் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக் மற்றும் மேனகா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராதிகா, ராகுல் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×