search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager arrested"

    • பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
    • மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருண் பிரசாத் என்கிற சிட்டா (வயது 23). இவர் அதேபகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி அருண் பிரசாத் பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது வீட்டிற்கு செல்லாமல் பக்கத்து கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாணவி சோகத்துடன் இருப்பதை பார்த்த உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவி நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் ஆரூர் கிராமத்தில் உள்ள அருண் பிரசாத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாணவியன் உறவினர்கள் வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிப் பார்த்துள்ளனர். அதில் மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவியின் உறவினர்கள் அந்த செல்போனை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த அருண் பிரசாத் தப்பிவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அருண் பிரசாத்தை அவரது தொலைபேசி எண்ணின் மூலம் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில் குளத்தூர் 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்சில் அருண் பிரசாத் வந்திறங்கினார். உடனே அருண் பிரசாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஒரிரு தினங்களில் போலீஸ் காவலில் எடுத்து அருண் பிரசாத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாக தயார் செய்து வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கருங்கல்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராசு (வயது 25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழக்கம்பலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் காரில் சென்றார். தாமரச்சல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சிறுமியின் தந்தை அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு முகக்கவசம் மற்றும் தலைக் கவசம் அணிந்து வந்த அல்பின் தாமஸ்(வயது33) என்ற வாலிபர், காரில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை உண்மையான துப்பாக்கி போன்று காண்பித்து மிரட்டியுள்ளார்.

    பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதுபற்றி கடையில் இருந்து திரும்பிவந்த தந்தையிடம் சிறுமி தெரிவித்தார். அதுபற்றி அவர் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து சிறுமியை மிரட்டிய அல்பின் தாமசை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    • புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவிபுதூர் கிராமத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் முத்துவேல் (வயது 20). டிரைவர். இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • சங்கர் குரு (22), இவரது நண்பர் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).
    • இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சன்னியாசி குண்டு பகுதியில் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு சீனிவாசன் அவென்யூ பகுதிையை சேர்ந்தவர் சங்கர் குரு (22), இவரது நண்பர் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).

    சரமாரி வெட்டு

    இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சன்னியாசி குண்டு பகுதியில் இருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த வாகனங்களை சங்கர் குரு, பிரகாஷ் ஆகிய 2 பேரும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), வெங்கடேஷ், சுரேஷ் உள்பட 5 பேர் 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் 2 பேருக்கும் தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார் 5 பேரையும் தேடி வந்தனர்.

    வாலிபர் கைது

    இதில் ஸ்ரீகாந்த் நேற்றிரவு போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இன்று சிறையில் அடைக்கிறார்கள். மேலும் தலைமறைவான 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன.
    • இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அன்புநகரில் உள்ள பகவதி அம்மன் கோவில், ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிசிடிவி ஆதாரம், மற்றும் கோவில் அருகே பொதுமக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை நாமக்கல் கணேசபுரத்தில் பெருச்சாளி என்ற பிரவீன்பாண்டியனை (22) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன்பாண்டியன் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவரிடம் போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடம் தக–ராறு செய்–து தாக்கி விட்டு தப்பியோடினர்.
    • மரக்–கா–ணம் போலீ சார் வழக்–குப்–பதிவு செய்து விசா–ரணை நடத்–தி–னர்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் மரக்–கா–ணம் அருகே ஊரணி பகு–தி–யில் உள்ள இறால் கம்–பெ–னி–யில் – தாய் லாந்து நாட்–டைச் சேர்ந்த மட்–காம், ஸ்ரீ பியாங்–ஜான் ஆகி–யோர் தொழி–லா–ளர்–க–ளாக பணி–பு–ரிந்து வரு–கின்–ற–னர். இவர்கள் இருவரும் நேற்று முன்–தி–னம் ஊர–ணி–யில் இருந்து ஆலப்–பாக்–கம் நோக்கி சென்று கொண்–டிந்–த–னர். அப்–போது பின்–னால் மோட்–டார் சைக்–கி–ளில் வந்த 3 பேர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடம் தக–ராறு செய்–து தாக்கி விட்டு தப்பியோடினர். அவ்வழியே வந்தவர்கள் 2 பேரை–யும் மீட்டு சிகிச்–சைக்–காக புதுச்–சேரி அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.

    இது–கு–றித்த புகா–ரின்– பேரில் மரக்–கா–ணம் போலீ சார் வழக்–குப்–பதிவு செய்து விசா–ரணை நடத்–தி–னர். இதில் தாய்–லாந்து நாட்டை சேர்ந்–த–வர்–களை தாக்–கி–யது ஊரணி மாரி–யம்–மன் கோவில் தெருவை சேர்ந்த கோட்டி என்ற பிரேம் (வயது 25) மற்–றும் அவ–ரது கூட்–டா–ளி–கள் என்–பது தெரி–ய–வந்–தது. இதைய–டுத்து பிரேமை கைது செய்த போலீசார், தலை–ம–றை–வாக உள்ள 2 பேரையும் வலை–வீசி தேடி வருகின்றனர்.

    • சதீஷ் (23). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மெய்யனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதீஷ் (23). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மெய்யனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். சதீஷ் பணம் தர மறுக்கவே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த வாலிபர் சதீசை கத்தி முனையில் மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட வாலிபர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மலைப்பட்டி ராம்கி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முரளி(34) என்பது தெரியவந்தது. போலீசார் முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ஆதிகேசவன் (வயது 22) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆதி கேசவன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதிகேசவனை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். ஆதிகேசவன் மீது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய உதயசூரியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் சத்யராஜ் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை செல்லபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் கிரதிக் ஆதித்யா( வயது 30). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எல்ஐசி காலனியில் இ சேவை மையம் நடத்தி வரும் சத்யராஜ் (40 ) என்பவர் எங்களது ஆஸ்பத்திரி டாக்டர் பெயரில் போலியான இறப்பு சான்று மற்றும் போலியான முத்திரைகளை பயன்படுத்தி சான்று வழங்கி வருகிறார்.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் சத்யராஜ் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை வாழ்ராஜபாளையம் பகுதியில் சித்திக் (33) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து மது விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 704 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சித்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் 704 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×