search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student pregnant"

    • 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
    • போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் ஐ.டி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இதையடுத்து மாணவியை, அவரது தாய் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதை கேட்டதும் மாணவியின் தாய் அதிர்ச்சியானார். இதற்கிடையே இந்த தகவல் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவியும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரும் 6-ம் வகுப்பில் இருந்து தற்போது கல்லூரி வரை ஒன்றாக படித்து வருவது தெரியவந்தது.

    நீண்ட நாள் பழக்கம் என்பதால் இவர்களது நட்பு காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்பு தேர்வின் போது விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது மாணவி, தனது காதலரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அந்த சமயம் அங்கு யாரும் இல்லாததால் காதலர், தான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகளை தெரிவித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் தற்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது விக்னேஸ்வரன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பிணியானார். மகள் 7மாத கர்ப்பிணியாக உள்ளதை அறிந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இது குறித்து அவர்கள் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

    கோவையில் 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது அண்ணன் தான் காரணம் என்பது தெரியவந்தது. 18 வயதாகும் அவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்திய போலீசார் மாணவியின் அண்ணன் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் (போக்சோ) 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    மயக்க மருந்து கொடுத்து மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நம்பியூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.

    மாணவி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்ற போது அங்கு உறவினர் ஒருவரின் மகனான செந்தில் என்பவர் மாணவிக்கு ஆப்பிள் ஜீஸ் கொடுத்தார். அப்போது அதில் மயக்க மருந்து கலந்ததால் மயங்கிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இந்நிலையில் மாணவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே நம்பியூர் மற்றும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற போது மாணவி கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் வழக்குபதிவு செய்ய விசாரணை நடத்தினார். தலைமறைவான வாலிபர் செந்திலை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

    ×