search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
    X

    மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    • திருமங்கலம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது விக்னேஸ்வரன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பிணியானார். மகள் 7மாத கர்ப்பிணியாக உள்ளதை அறிந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இது குறித்து அவர்கள் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

    Next Story
    ×