search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
    X

    கோப்புபடம். 

    பல்லடம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    • சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார்.

    பல்லடம்:

    திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சங்கர் (வயது 34). இவர் தற்போது பொங்கலூரை அடுத்த தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனையிட்டதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×