என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- சேலம் கொல்லப்பட்டி துரைசாமி நகர் பகுதியில் தனது வீட்டின் முன்பு ரூ2.25 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
- அதிகாலை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் கொல்லப்பட்டி துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 24). இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு ரூ2.25 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். இன்று அதிகாலை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் எதிரில்
உள்ள சுடுகாடு அருகே ஒரு
வாலிபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு
சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு பணியில் இருந்த பள்ளப்பட்டி போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் இளவரசன் மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் (24) என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்