search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
    X

    பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை வழக்கில் வாலிபர் கைது

    • அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். அய்யனார் என்ற வாலிபர் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்
    • மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். இவர் அதேபகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது டீக்கடையை காலி செய்யகோரி அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அய்யனார் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்.இதனால் மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதையடுத்து இவரது உறவினர்கள் அண்ணாதுரையின் உடலை பண்ருட்டி சித்தூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு விரைந்து சென்ற புதுப்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அவரது மனைவி, போலீசாரிடம் இன்று கொடுத்த புகாரின் பேரில் அய்யனாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×