search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம்
    X

    வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம்

    • உறையூர் பகுதியில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம்
    • புரோக்கர் அதிரடி கைது செய்யப்பட்டு உள்ளார்

    திருச்சி,

    திருச்சி உறையூர் ஏ.யூ.டி. காலனி பி. வி.குடோன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 27). இவர் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. பின்னர் முகமது அசாருதீனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×