என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய வாலிபர் கைது
- 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து வேலூர் தெற்கு போலீசார் பைக் திருடு போன இடங்களில் பதிவான காட்சிகளை வைத்து பைக் திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்த தனசேகர் (வயது 45) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தனசேகரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 10 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எங்கெங்கு பைக்குகளை திருடினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






