என் மலர்
நீங்கள் தேடியது "நடைபயணம்"
- 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
- அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.
தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார். அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விஜய் கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல் அவர்களை அழைத்து துக்கம் விசாரித்தது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை திருப்போரூரில் தொடங்கினார்.
- இந்த நடைபயணத்தை 100ம் நாளில் தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.
தர்மபுரி:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பிரசார பயணத்தை திருப்போரூர் தொகுதியில் கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கினார்
100 நாட்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற அவர், தனது நடைபயணத்தை தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.
இந்நிலையில், தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
மன உளைச்சல், மன அழுத்தத்தில் தான் இந்த நடைபயணத்தை தொடங்கினேன். அடுத்த 108-வது நாளில் தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்.
தி.மு.க. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 13 சதவீத வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 100-க்கு 13 மதிப்பெண்தான். எனவே பெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு விடமாட்டோம்.
இந்த நடைபயணத்தில் நிறைய கத்துக்கிட்டேன். இந்த நடைபயணம் வாயிலாக நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிட்டது.
திமுக டெல்டாவை அழித்துவிட்டார்கள். 60 ஆண்டு காலம் ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக இந்த டெல்டாவை எந்த ஒரு அடிப்படையும் இல்லாதவையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான ஒரு ஆட்சி இதுவரைக்கும் நாம் பார்த்தது கிடையாது என தெரிவித்தார்.
- அவற்றில் சுபம் என்பவருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
- இந்த விஷயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17- ந் தேதி முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' மேற்கொண்டார்.
இடையில் 27 ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்கள் புடை சூழ புல்லட் பைக் பேரணி நடத்தினர்.
பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளூரில் கிடைக்கும் சில பைக்குகளை பேரணிக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவற்றில் சுபம் என்ற இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
பேரணிக்கு பின் பிறகு பைக் திருப்பித் தரப்படும் என்று பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்ததாக சுபம் கூறினார்.
இருப்பினும், பேரணி முடிந்ததும், தனது பைக்கை எடுத்துச் சென்ற பாதுகாப்பு ஊழியர்களை காணவில்லை
பேரணிக்கு சென்ற மற்ற பைக்குகள் திரும்பியபோதிலும், அவரது வாகனம் மட்டும் கிடைக்காததால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த விஷயம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின் நிறைவு விழாவில், ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை சுபம்க்கு பரிசளித்தார்.
சாவியை ராகுலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம் அதே பழைய பைக் மாடலை பரிசாக பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
- பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
- சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.
இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.
- ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
- மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை.
* இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது.
* பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள்.
* தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்க பார்க்கின்றனர்.
* ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
* மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க.
* மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
* பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
* மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடிய கூட்டம்.
* மெஜாரிட்டி மெஜாரிட்டி என கூறிக் கொண்டிருந்தவர்களை மைனாரிட்டியாக மாற்றிக்காட்டியது இந்தியா கூட்டணி.
* பீகார் சட்டசபையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன்.
* மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
* அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது.
* பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
- கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உங்களையெல்லாம் பார்ப்பதற்காக 2000 கி.மீ. கடந்து வந்திருக்கிறேன்.
* பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவிற்கு வருவார். கலைஞரும் லாலு பிரசாத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
* பா.ஜ.க.வின் அடக்குமுறையை தாண்டி அரசியல் செய்வதால் லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார்.
* எத்தனையோ வழக்கு இருந்த போதிலும் தைரியமாக எதிர்கொண்டதால் உயர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறார் லாலு பிரசாத்.
* லாலுவின் வழியில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
* தேசத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் போர்க்குரல் எழுப்பி உள்ளது பீகார் மாநிலம்.
* ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் நட்பு மட்டுமல்ல, 2 உடன்பிறப்புகளுக்கு இடையேயான நட்பு. இந்த நட்பு வெற்றியை பெற்று தரும்.
* பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பறிக்க நினைக்கின்றனர்.
* மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர் பா.ஜ.க.வினர்.
* ஜே.பி.நாராயணன் செய்த பணியை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார்.
* 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை.
* கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
* ராகுல் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக பீகார் வந்துள்ளேன்.
* ராகுல் காந்தி வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார்.
* சொந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குபவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை புறப்பட்டார்.
- தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டார்.
இந்நிலையில் வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
இந்த பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
- வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
- தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். சிறப்பு விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் NH 57 பகுதியில் நடைபெறும் பேரணியில் காலை 10.30 மணி அளவில் பங்கேற்கிறார்.
- பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
- மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.

இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
"வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.
- 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
- அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை எதிர்த்து பீகாரில் கடந்த 17 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கினார். 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
இந்நிலையில் நேற்று ராகுல் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தவறி ஜீப் முன் விழுந்தார். அவர் மீது ஜீப் ஏறி இறங்கியது.
உடனடியாக, போலீஸ் அதிகாரிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் வாகனத்தை பின்னுக்குத் தள்ளி காயமடைந்த கான்ஸ்டபிளைக் காப்பாற்றினர்.
ராகுல் காந்தி தண்ணீர் வழங்கி காயமடைந்த கான்ஸ்டபிளை ஆசுவாசப் படுத்தினார். தனது ஜீப்பில் வந்து அமருமாறு அவரை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்து பாஜக ராகுலை விமர்சித்துள்ளது.
- தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
- இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை, பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 250 எம்பிக்கள் பாதி வழியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் இதை உறுதிப்படுத்தி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வரைவு பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இந்த நடைபயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
- அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கினார்.
- டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.
100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்தப் பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.






