என் மலர்
நீங்கள் தேடியது "மக்கானா"
- பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
- மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.

இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
"வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.
- இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது.
- உடல்நலத்துக்கு ஏற்றதா என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்த்தான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன... எங்கிருந்து கிடைக்கிறது... உடல்நலத்துக்கு ஏற்றதா என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக மக்கானா, வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும். அப்பகுதி மக்களால் அதிக அளவு விரும்பிச் சாப்பிடப்படுகிறது. நம் ஊரிலும் இப்போது பரவலாகக் கிடைக்கிறது. பார்ப்பதற்கு வெள்ளையாக குட்டி காளான் போல இருக்கும், சுவைக்கும்போது பாப்கார்ன் சாப்பிடுவது போன்று இருக்கும்.

இது, அல்லி மலர்களின் விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் இது முழுக்க முழுக்க சைவம் என்றே சொல்லலாம். இதை, ஆங்கிலத்தில் ஃபாக்ஸ் நட்ஸ் என்பார்கள். இதை அப்படியே சற்று வறுத்து பாப்கார்ன் போல சிலரும், தயிரோடு சேர்த்தும், சிலர் அதில் குழம்பும்கூட செய்து சாப்பிடுவார்கள். தற்போதுதான் தென்னிந்தியாவில் இந்த மக்கானா அறிமுகமாகி உள்ளது. எனவேதான் ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டு களில் மட்டுமே கிடைக்கிறது.
வாங்கும்போதே மக்கானாவை அது ஏற்கெனவே சமைக்கப் பட்டதா இல்லையா எனக் கவனித்து வாங்க வேண்டும். சில இடங்களில் சமைத்து பாப்கார்ன் போல் விற்கிறார்கள். அதை நாம் அப்படியே சாப்பிடலாம். சமைக்காதது எனக் குறிப்பிட்டிருந்தால், அதை வாங்கி நாம் சமைத்து சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, அவற்றில் இருந்தே தேவையான அளவு புரதச்சத்து உள்ளிட்ட இதர சத்துகள் கிடைத்துவிடும்.
எப்படி பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோமோ அதேபோல் இதையும் நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் ஏற்ற இதில் மக்னீசியம், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.
சிலர் உடல் எடையைக் குறைக்கவும் இதை எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில், இதில் கொழுப்புச்சத்து மிகக்குறைவாகவே இருக்கிறது. நமது சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.






