என் மலர்
இந்தியா

பேரணியில் காணாமல் போன பைக்.. கலங்கி நின்ற இளைஞர் - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ராகுல் காந்தி!
- அவற்றில் சுபம் என்பவருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
- இந்த விஷயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17- ந் தேதி முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' மேற்கொண்டார்.
இடையில் 27 ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்கள் புடை சூழ புல்லட் பைக் பேரணி நடத்தினர்.
பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளூரில் கிடைக்கும் சில பைக்குகளை பேரணிக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவற்றில் சுபம் என்ற இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
பேரணிக்கு பின் பிறகு பைக் திருப்பித் தரப்படும் என்று பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்ததாக சுபம் கூறினார்.
இருப்பினும், பேரணி முடிந்ததும், தனது பைக்கை எடுத்துச் சென்ற பாதுகாப்பு ஊழியர்களை காணவில்லை
பேரணிக்கு சென்ற மற்ற பைக்குகள் திரும்பியபோதிலும், அவரது வாகனம் மட்டும் கிடைக்காததால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த விஷயம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின் நிறைவு விழாவில், ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை சுபம்க்கு பரிசளித்தார்.
சாவியை ராகுலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம் அதே பழைய பைக் மாடலை பரிசாக பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.






