search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arena"

    • 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.
    • இவற்றை நாளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் ஸ்கேட்டிங் தளம் உள்ளிட்டவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறாா்.

    இந்த விளையாட்டரங்க–த்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் தளம், இரு கையுந்து பந்து தளங்கள், 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.

    இவற்றை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.

    இதையொட்டி, அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த்,

    மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நேர்முக தேர்வு நடைபெறும்.
    • 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000 வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்கநிலை பளுதூக்குதல் பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைக்கப்படவுள்ளது.

    விளையாடு இந்தியா மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதுக்குட்பட்ட பளுதூக்குதல் வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்ப டவுள்ளார்.

    விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம்வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்க ளுக்கிடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல.

    முற்றிலும்த ற்காலிகமானதாகும். இதன் அடிப்டையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

    இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) வருகிற 3-ந்தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் என்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    தகுதி வாய்ந்த விண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    உடற்தகுதி, விளையாட்டு த்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

    தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட அலுவலக தொலைபேசி எண்.04362-235 633 என்ற எண்ணிலும் மற்றும் கைபேசி எண்.7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட்டேனியல் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வருங்காலங்களில் ஏப்ரல்-2023 முடிய நடை பெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள உள்ள தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

    ேமலும் தேர்வு போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

    வளை கோல்பந்து விளையாட்டிற்கு (மாணவர்கள் மட்டும்) 13.12.22 அன்று அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் சிவகங்கையிலும், கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவியர்களுக்கு 13.12.22 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னை–யிலும், கால்பந்து விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) 13.12.22 அன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையிலும், 0 விளையாட்டிற்கு மாணவ-மாணவிகளுக்கு 14.12.22 அன்று ஜவஹர் லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னையிலும் நடைபெற உள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள், வயது வரம்பு 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.

    ஆதார் கார்டு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ், நகராட்சி / கிராம நிர்வாக அலுவலரிட் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் (ஜனவரி 2012 ஆம் ஆண்டிற்குள்ளும் 5 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்).

    தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து தேர்வு போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04362-235633 என்ற எண்ணிலும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண் 7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும்.
    • மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் , தஞ்சை தொகுதிக்குட்பட்ட இடங்களில் நிறைவேற்ற வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் போக்குவரத்திற்கு இடையூறாகவும் அதிக விபத்துகள் ஏற்படும் காரணத்தாலும்அ ப்பாலத்தை மேரீஸ் கார்னரிலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சை சட்டமன்ற தொகுதியில் ஆண்,பெண் இருபாலரும் பயிலும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். தஞ்சைகாட்டுத்தோட்டம் பகுதியில்ர அரசுவேளாண்கல்லூரி அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை செய்யும் வசதி அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நவீன அரிசி ஆலை அமைத்து தர வேண்டும்.

    மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சை பெரிய கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் சோழன் சிலை அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து பெரிய கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படி சாலை அமைத்து, தற்சமயம் சாலையாக உள்ள தடத்தை மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும், வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

    சி.இ.ஓ, டி.இ.ஓ, பி.ஓ.அலுவலக கட்டிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைத்து தர வேண்டும்.

    பூக்காரத் தெரு பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய (குளிரூட்டப்பட்ட) பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி

    மற்றும் முழுமையான தமிழ் வழி பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×