search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் மேம்பாலத்தை ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்-  கலெக்டரிடம், எம்.எல்.ஏ. மனு
    X

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

    தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் மேம்பாலத்தை ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்- கலெக்டரிடம், எம்.எல்.ஏ. மனு

    • பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும்.
    • மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் , தஞ்சை தொகுதிக்குட்பட்ட இடங்களில் நிறைவேற்ற வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் போக்குவரத்திற்கு இடையூறாகவும் அதிக விபத்துகள் ஏற்படும் காரணத்தாலும்அ ப்பாலத்தை மேரீஸ் கார்னரிலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சை சட்டமன்ற தொகுதியில் ஆண்,பெண் இருபாலரும் பயிலும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். தஞ்சைகாட்டுத்தோட்டம் பகுதியில்ர அரசுவேளாண்கல்லூரி அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை செய்யும் வசதி அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நவீன அரிசி ஆலை அமைத்து தர வேண்டும்.

    மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சை பெரிய கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் சோழன் சிலை அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து பெரிய கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படி சாலை அமைத்து, தற்சமயம் சாலையாக உள்ள தடத்தை மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும், வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

    சி.இ.ஓ, டி.இ.ஓ, பி.ஓ.அலுவலக கட்டிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைத்து தர வேண்டும்.

    பூக்காரத் தெரு பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய (குளிரூட்டப்பட்ட) பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி

    மற்றும் முழுமையான தமிழ் வழி பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×