என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
- திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி ரம்யா (வயது36). இவர்கள் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று ஆலம்பட்டி-திருமங்கலம் மெயின் ரோட்டில் பாய்ஸ் டவுன் பகுதியில் ரம்யா நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த 2 மர்ம நபர்கள், ரம்யா கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






