search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
    X

    சேலம் அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

    சேலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் உள்ள  மஞ்சக்கல்பட்டி, சிவா பாலிமேடு இறக்கம் கள்ளுக்கடை பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்புக்கரசி (31). இவர்களுக்கு கனிஷ்கா(4) என்ற  மகள் உள்ளார்.

    செல்வம்-அன்புக்கரசி தம்பதியினர் எடப்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மாமர தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மாலை நேரம் ஆனதும் அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக தெரிகிறது. இதனால் அன்புக்கரசி, அவரிடம் இப்படி மது குடிக்காதீர்கள். தோட்ட வேலையை கவனிங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால், செல்வம் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. பணத்தை  குடித்து செலவழித்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து செல்வம் மது குடித்துவிட்டு வந்து தோட்டத்தை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் வீட்டில் கடந்த 2 நாட்களாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    தினம் தினம் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்புக்கரசி குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மனைவியும், மகளும் காணாததால் செல்வம் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். இன்று ராஜேந்திரன் என்பவருடைய மாமர தோட்டத்தில் உள்ள கிணற்றில் அன்புக்கரசியும், குழந்தை கனிஷ்காவும் பிணமாக மிதந்தனர். அக்கம், பக்கத்தில் வசித்து வருபவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அன்புக்கரசி மற்றும் குழந்தை கனிஷ்கா ஆகியோர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  

    இது பற்றி போலீசார் கூறுகையில், அன்புக்கரசி தனது மகள் கனிஷ்காவை அழைக்குக் கொண்டு மாமர தோட்டத்திற்கு வந்துள்ளார். பின்னர் தனது மகளை தூக்கி நெஞ்சோடு இறுக்கி பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதனால்  தண்ணீரில் மூழ்கி தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.
    Next Story
    ×