search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து  3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
    X

    கொலை செய்யப்பட்ட மாயாண்டி

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

    • நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58).
    • கொலை தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

    சாலை மறியல்

    இவர் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்–டில் இருந்து வெளியே சென்றார், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    ஆனால் போலீசார் அவரை கண்டுபிடிக்காததை கண்டித்து நேற்று முன்தினம் காலை மாயாண்டியின் உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தாழையூத்து அருகே சிதம்பரநகர் காட்டு பகுதியில் மாயாண்டி கல்–லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தாழை–யூத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவரது உடல் கிடந்ததால் தாழையூத்து போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசா–ரணை நடத்தி அவருடன் வேலை பார்த்து வந்த மாரி மதன் (21) என்பவரை கைது செய்தனர்.

    3-வது நாள் போராட்டம்

    இந்த சம்பவத்தில் போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்து நேற்று முன்தினம் மாயாண்டி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். நேற்று 2-வது நாளாக கரையிருப்பு கிராமத்தில் பந்தல் அமைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாயாண்டி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×