search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்.

    மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

    • பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.
    • துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

    சீர்காழி:

    வட்டார வளமையம் கொள்ளிடம் ஒன்றியத்தின் சார்பாக உலக மாற்றுதிற னாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இப்பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையே ற்றார். பேரணியை ஒன்றிய துணைத்தலைவர் பானுசேகர் தொடங்கிவை த்தார்.

    கொள்ளிடம்காவல் துணை ஆய்வாளர் கோவிந்த ராஜன் வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமையமேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பேசும் பொழுது மாற்றுதி றனாளி குழந்தைகளை சமூகத்தில் பாதுகாப்பு கொடுத்து அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களிடம் பல திறமைகள் உள்ளது.

    அதை வெளிபடுத்த அனைவரும் வாய்பளிக்க வேண்டும்.

    மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு தொகை இலவச பேருந்து பயணம் கல்வி உதவிதொகை உதவி உபகரணங்கள் பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.

    இவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பிசியோதெரபி பயிற்சி கொடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

    இந்நிகழ்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐசக் ஞானராஜ், பாக்கியலெட்சுமி, அபூர்வராணி, கவிதா, சிறப்பு ஆசிரியர்கள் பிரவினா, ரூபா, ராஜலெட்சுமி, கீதா, உமா, ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் தணிக்கையா ளர்கள் ராஜீவ் காந்தி சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பிசியோதெரபி மலர் கண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×