என் மலர்
நீங்கள் தேடியது "Soup"
- பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்.
- இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவு.
தேவையான பொருட்கள்
பார்லி தூள் - 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)
பார்லி அரிசி - 4 டீஸ்பூன்
பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
துளசி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பாகற்காயில் வைட்டமின் ஏ, கே சத்துகள் நிறைந்திருக்கின்றன.
- இன்று பாகற்காய் ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - கால் கிலோ,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
புளி - கோலி அளவு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.
பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் ரெடி.
இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிண்ணத்தில் ஊற்றி சூப் போன்றும் குடித்தால், பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
- நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.
தேவையான பொருள்கள்:
கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
முழுப் பூண்டு - 1
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய்ப் பால்- 50 மில்லி
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.
செய்முறை:
நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.
சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.
ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.
மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.
இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் எடை குறைய தினமும் முளைக்கட்டிய பயறை சாப்பிடலாம்.
- சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய பயறில் ஊட்டச்சத்துகள் அதிகம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய பயறு கலவை - ஒரு கப்,(அனைத்து பயிறுகளும் கலந்தது)
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு , மிளகுத்தூள் - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முளைக்கட்டிய பயறை வேக வைக்கவும். சிறிதளவு வேக வைத்த பயறை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பயறை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த பயறு சேர்த்து கலந்து பருகலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்.
- இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - ஒரு கப்,
துவரம்பருப்பு - 3 டீஸ்பூன்,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
புளி - ஒரு சிறிய உருண்டை,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு, கடுகு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
இப்போது சூப்பரான கறிவேப்பிலை ரசம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
- வாழைத்தண்டு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.
* பின்பு சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் எலும்புடன் - அரை கிலோ
மட்டன் கொழுப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
மசாலா அரைக்க :
மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 8
பூண்டு பற்கள் - 8
சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை
* மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
* தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.
* ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
* இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பேபி கார்னில் கலோரிகள் குறைவாக உள்ளது.
- பேபி கார்னில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் - 6
இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும்.
சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும்.
அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும்.
பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
- சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த ரசம் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன்(எலும்புடன்) - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 1
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
பின்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி சூப் செய்து கொடுக்கலாம்.
- தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேவையான பொருட்கள் :
பீன்ஸ் / அவரைக்காய் - தலா 50 கிராம்
கேரட் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி - ஒரு அங்குல நீளமுள்ள துண்டு
பூண்டு - 7பல்
நசுக்கிய மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
இஞ்சி மற்றும் பூண்டுப் பல்லை தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில், குக்கரை வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காய்கறிகள், இஞ்சி மற்றும் பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, நசுக்கிய மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
அதில் காய்கறிகளை விட மூன்று அங்குலம் அதிகமாகத் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்புத் தீயைக் குறைத்து, 20 நிமிடங்கள் குறைந்த தீயிலேயே வேக விடவும்.
அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறக்கவும்.
காய்கறிகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பரிமாறும்போது உப்பு மற்றும் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரெடி.
சூப்பில் கடிப்பதற்கு காய்கறிகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், காய்கறிகளை வடிகட்டாமல், அப்படியே சூப்பில் சேர்த்துக் குடிக்கலாம். நறுக்கும்போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வேப்பம் பூ அவ்வளவு கசப்பாக இருக்காது.
- இந்த ரசம் குடிப்பதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.
தேவையான பொருட்கள்
வேப்பம் பூ - 2 மேஜைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளி கரைசலில் வெட்டிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கையால் நன்றாக பிசைந்துவிடவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.
இறுதியாக ரச கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.
இப்போது மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெடி.
இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் வைத்து சாப்பிடலாம்.
அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.