search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ragi recipe"

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்,

    தண்ணீர் - 4 கப்,

    கேரட் - 1

    பசலை கீரை - அரை கப்

    பச்சை பட்டாணி - கால் கப்

    காலிஃப்ளவர் - சிறிதளவு

    துருவிய கோஸ் - கால் கப்

    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

    சோயா பீன்ஸ் - கால் கப்

    பீன்ஸ் - கால் கப்

    எலுமிச்சை பழம் - பாதி

    உப்பு - தேவைக்கு

    மிளகு தூள் - தேவைக்கு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நெய் - 1 ஸ்பூன்

    செய்முறை

    * கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    * பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி.

    * விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு, மோர் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - கால் கப்
    தண்ணீர் - 1 கப்
    மோர் - 1 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - கால் டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

    கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிபிடிக்காது. கேழ்வரகு நன்றாக வெந்து வரும் போது இறக்கி குளிர வைக்கவும்.

    நன்றாக ஆறிய பின்னர் அதில் மோர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு - மோர் கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×