search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Kanji"

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) - அரை கப்
    கேரட் -  1
    பீன்ஸ் - 5
    பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
    வெங்காயம் - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
    சீரகம் -  அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 2 1/2 கப்



    செய்முறை :

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.

    மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.

    கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.

    குறிப்பு :

    கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் .
    கொள்ளு பார்லி கஞ்சியை தினமும் பருகுவதால் உடலுக்கு உறுதி கிடைக்கும். உடலில் உள்ள கெட்டநீர் முழுவதும் வெளியேறும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வறுத்துப் பொடித்த கொள்ளு, வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
    கொள்ளு மாவு - 1 கப்
    பார்லி மாவு - அரை கப்
    சீரகத்தூள் - 1 சிட்டிகை,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை

    கொள்ளு, பார்லி மாவை ஒன்றாக போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீல் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கொதிக்க விடவும்.

    அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். கஞ்சி வெந்து வாசனை வரும் போது சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.

    அருமையான கொள்ளு பார்லி கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு, மோர் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - கால் கப்
    தண்ணீர் - 1 கப்
    மோர் - 1 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - கால் டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

    கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிபிடிக்காது. கேழ்வரகு நன்றாக வெந்து வரும் போது இறக்கி குளிர வைக்கவும்.

    நன்றாக ஆறிய பின்னர் அதில் மோர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு - மோர் கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×