search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "healthyrecipes"

    • கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
    • இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

    தேவையான பொருட்கள் :

    விழுதாக அரைக்க:

    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    மிளகு - 2 டீஸ்பூன்,

    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - 4,

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

    நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.

    குழம்புக்கு:

    நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    சின்ன வெங்காயம் - 5,

    பூண்டுப் பல் - 4,

    புளி - எலுமிச்சம்பழ அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

    ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும்.

    இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து போட்டு தாளித்த பின்னர் உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.

    இப்போது சுவையான கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு ரெடி.

    சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    கொள்ளு பார்லி கஞ்சியை தினமும் பருகுவதால் உடலுக்கு உறுதி கிடைக்கும். உடலில் உள்ள கெட்டநீர் முழுவதும் வெளியேறும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வறுத்துப் பொடித்த கொள்ளு, வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
    கொள்ளு மாவு - 1 கப்
    பார்லி மாவு - அரை கப்
    சீரகத்தூள் - 1 சிட்டிகை,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை

    கொள்ளு, பார்லி மாவை ஒன்றாக போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீல் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கொதிக்க விடவும்.

    அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். கஞ்சி வெந்து வாசனை வரும் போது சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.

    அருமையான கொள்ளு பார்லி கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கம்பு, கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - 200 கிராம்
    பச்சரிசி மாவு - 100 கிராம்
    கம்பு மாவு - 300 கிராம்
    முந்திரிப் பருப்பு - 50 கிராம்
    நெய் - 50 கிராம்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    பூண்டுப்பல் - 8
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

    முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.

    சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, வெங்காயம், நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது).

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கம்பு சிறுகீரை அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×