search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulambu"

    • வடை மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
    • இன்று வடை மோர் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மெதுவடை அல்லது பருப்பு வடை - 10

    தயிர் - 2 கப்

    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    ஊறவைத்து நைசாக அரைக்க :

    அரிசி - 1 ஸ்பூன்

    துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    சீரகம் - 1 ஸ்பூன்

    கொரகொரப்பாக அரைக்க :

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பூண்டு - 5 பல்

    இஞ்சி - சிறிது துண்டு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 ஸ்பூன்

    கடுகு - கால் ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை :

    * அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

    * கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான வடை மோர் குழம்பு ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
    • நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.

    தேவையான பொருள்கள்:

    கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    முழுப் பூண்டு - 1

    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

    காய்ந்த மிளகாய் - 4

    தக்காளி - 2

    புளி - நெல்லிக்காய் அளவு

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தேங்காய்ப் பால்- 50 மில்லி

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

    செய்முறை:

    நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

    ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

    மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

    இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் மீன் - அரை கிலோ

    தேங்காய் பால் - 2 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 4

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கல் உப்பு - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    * குழம்பு கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்.

    * மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த குழம்பு தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் ஆரோக்கியமானதும் கூட.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் - 1

    உருளைக்கிழங்கு - 4

    கத்திரிக்காய் - 4

    முருங்கைக்காய் - 1

    எலுமிச்சை - 1/2

    பூண்டு - 1

    ப.மிளகாய் - 4

    மல்லி - 2 டீஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    பின்னர் தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, உப்பு தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

    காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும்.

    இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் குழம்பு ரெடி!!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பலவகை ரசங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
    • அகத்திக்கீரை ரசம் சுவையிலும் மணத்திலும் தனித்துவம் மிக்கது.

    தேவையான பொருட்கள்

    அகத்திக்கீரை - 1 கட்டு

    சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 3

    சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

    தேங்காய் - 2 சில்லு

    புளி - எலுமிச்சை அளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும்.

    சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

    புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

    வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான அகத்திக்கீரை ரசம் ரெடி.

    பெண்களுக்கு தாய்ப்பால் ஊற, இந்த ரசத்தைத்தான் கொடுப்பார்கள்.

    இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
    • கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    துவரம்பருப்பு - 1/4 கப்

    முருங்கைக்கீரை - ஒரு கப்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1 சிறியது

    பச்சைமிளகாய் - 3

    பூண்டுப்பல் - 5

    மஞ்சள்தூள் - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய்ப்பூ - 3 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    நல்லெண்ணெய்

    கடுகு

    உளுந்து

    சீரகம்

    பெருஞ்சீரகம் - சிறிது

    காய்ந்த மிளகாய் - 2

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் துவரம் பருப்பை போட்டு நன்றாகக் கழுவிவிட்டு, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

    கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

    தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

    நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும். முருங்கைக்கீரை அதிகநேரம் கொதித்தால் கசக்க ஆரம்பித்து விடும். எனவே கீரை போட்டு 7 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.

    இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

    இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்.
    • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - ஒரு கப்,

    துவரம்பருப்பு - 3 டீஸ்பூன்,

    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

    புளி - ஒரு சிறிய உருண்டை,

    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

    நெய் - சிறிதளவு, கடுகு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.

    நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கறிவேப்பிலை ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ சாம்பார் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2,

    துவரம்பருப்பு - 3 கரண்டி,

    அரிசி மாவு - அரை டீஸ்பூன்,

    புளி - சிறு எலுமிச்சை அளவு,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    துவரம்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து மசித்து கொள்ளவும்..

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    கடாயில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.

    பழத்துண்டுகள் வெந்ததும் புளியைக் கரைத்து விட்டு, கொதித்ததும் சாம்பார் பொடி சேர்க்கவும்.

    பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பு சேர்த்து, அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லியைபோட்டு, சாம்பாரை கீழே இறக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ சாம்பார் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்புடன் - அரை கிலோ

    மட்டன் கொழுப்பு - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - 2 கொத்து

    மசாலா அரைக்க :

    மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

    சின்ன வெங்காயம் - 8

    பூண்டு பற்கள் - 8

    சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    * மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.

    * ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

    * பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    * இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
    • இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

    தேவையான பொருட்கள் :

    விழுதாக அரைக்க:

    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    மிளகு - 2 டீஸ்பூன்,

    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - 4,

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

    நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.

    குழம்புக்கு:

    நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    சின்ன வெங்காயம் - 5,

    பூண்டுப் பல் - 4,

    புளி - எலுமிச்சம்பழ அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

    ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும்.

    இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து போட்டு தாளித்த பின்னர் உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.

    இப்போது சுவையான கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு ரெடி.

    சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உரித்த பூண்டு - 1 கப்

    குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    புளி தண்ணீர் - ¾ கப்

    நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    கடுகு - ¼ டீஸ்பூன்

    வெந்தயம் - ¼ டீஸ்பூன்

    மிளகு - ¼ டீஸ்பூன்

    சீரகம் - ¼ டீஸ்பூன்

    அரைக்க:

    பூண்டு - 4 பற்கள்

    மிளகு - ½ டீஸ்பூன்

    சீரகம் - ½ டீஸ்பூன்

    செய்முறை:

    * புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

    * அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

    * அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகத்தை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.

    * பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

    * கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

    * இப்போது 'சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு' தயார்.

    * இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    நிறைய பேருக்கு மோர் குழம்பை பக்குவமாக வைக்க தெரியாது. இன்று பக்குவமாக பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்டைக்காய் - 3

    அரைக்க

    தேங்காய் - கால் கப்
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி - 1/2 துண்டு
    பூண்டு - 3
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    தாளிக்க

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 1

    செய்முறை :

    வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெண்டைக்காயை உப்பு போட்டு எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

    பின் அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.

    பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

    பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம்.

    அவ்வளவுதான் வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
    ×