search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசம்"

    • எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    • ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராக இருந்தது.

    பெங்களூரு பேருந்தின் பின்புறம் ஒட்டப்பட்ட உடனடி ரசம் தயாரிக்கும் பேஸ்ட்-க்கான விளம்பரம் இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த விளம்பர படத்தில், மனைவி வட இந்தியரா? என்ற வாசகமும், அருகில் ஒருவர் கையை நீட்டிய படி நிற்கும் படமும் இடம்பெற்று இருக்கிறது.

    விளம்பர படத்தை பார்க்கும் போது, வட இந்திய பெண்களுக்கு ரசம் வைக்க தெரியாதபடியும், குறிப்பிட்ட நிறுவனத்தின் உடனடி ரசம் பேஸ்ட் கொண்டு யாரும் எளிதில் ரசம் வைக்க முடியும் என்றும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




     


    விளமபர படம் தொடர்பாக பலர் பதில் அளித்துள்ளனர். இதில் ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராகவும், இந்த விளம்பரம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா இடையிலான திருமண உறவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தன. சிலர் இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சிலர் இந்த விளிம்பரம் திருமண உறவை மாநிலங்கள் கடந்து எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவித்துள்ளனர். 


    • சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
    • கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.

    * சாம்பார், ரசம், காரக்குழம்பு போன்றவைகளை தயார் செய்யும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் தருவாயில் அரை டீஸ்பூன் வெல்லம் கலந்தால் சுவை கூடும்.

    * கடலைப்பருப்பு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கிவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் ரவையும் கலந்து வடை சுட்டால் மொறுமொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.

    * எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரே இல்லாமல் மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைத்துவிட்டு இறக்கினால் முட்டைக்கோஸ் பொரியல் சுவையாக இருக்கும்.

    * உப்புமா தயார் செய்யும்போது ரவையை பொன்னிறமாக வறுத்து, பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு 1-க்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கொதித்தவுடன் வறுத்த மாவை கொட்டி கிளறி, அது வெந்தவுடன் இறக்கவும். அதில் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.

    * புளிக்குழம்பு தயார் செய்யும்போது முதலில் தேவையான அளவு தனியா, வர மிளகாய், வெந்தயம் போன்றவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணெலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சிறிதளவு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி கிளறவும். பின்பு மிக்சியில் அரைத்த கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் சேர்த்துவிட்டு குழம்பு கொதிக்கவும் இறக்கவும். அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாசனை கமகமக்கும்.

    * தோசைக்கல்லில் நறுக்கிய கோவக்காயை கொட்டி, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.

    * பாகற்காய் தொக்கு செய்யும்போது பாகற்காயுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து, மிளகாய் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக சுண்டி வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையாகவும் இருக்கும்.

    • பாகற்காயில் வைட்டமின் ஏ, கே சத்துகள் நிறைந்திருக்கின்றன.
    • இன்று பாகற்காய் ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - கால் கிலோ,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    புளி - கோலி அளவு,

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    காய்ந்த மிளகாய் - 3,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.

    பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் ரெடி.

    இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிண்ணத்தில் ஊற்றி சூப் போன்றும் குடித்தால், பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
    • நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.

    தேவையான பொருள்கள்:

    கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    முழுப் பூண்டு - 1

    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

    காய்ந்த மிளகாய் - 4

    தக்காளி - 2

    புளி - நெல்லிக்காய் அளவு

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தேங்காய்ப் பால்- 50 மில்லி

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

    செய்முறை:

    நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

    ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

    மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

    இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பலவகை ரசங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
    • அகத்திக்கீரை ரசம் சுவையிலும் மணத்திலும் தனித்துவம் மிக்கது.

    தேவையான பொருட்கள்

    அகத்திக்கீரை - 1 கட்டு

    சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 3

    சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

    தேங்காய் - 2 சில்லு

    புளி - எலுமிச்சை அளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும்.

    சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

    புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

    வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான அகத்திக்கீரை ரசம் ரெடி.

    பெண்களுக்கு தாய்ப்பால் ஊற, இந்த ரசத்தைத்தான் கொடுப்பார்கள்.

    இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்.
    • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - ஒரு கப்,

    துவரம்பருப்பு - 3 டீஸ்பூன்,

    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

    புளி - ஒரு சிறிய உருண்டை,

    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

    நெய் - சிறிதளவு, கடுகு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.

    நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கறிவேப்பிலை ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்புடன் - அரை கிலோ

    மட்டன் கொழுப்பு - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - 2 கொத்து

    மசாலா அரைக்க :

    மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

    சின்ன வெங்காயம் - 8

    பூண்டு பற்கள் - 8

    சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    * மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.

    * ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

    * பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    * இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த ரசம் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன்(எலும்புடன்) - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 1

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 5 பல்

    பச்சை மிளகாய் - 1

    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

    பட்டை, லவங்கம் - தலா 1

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

    வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    பின்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

    • வேப்பம் பூ அவ்வளவு கசப்பாக இருக்காது.
    • இந்த ரசம் குடிப்பதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.

    தேவையான பொருட்கள்

    வேப்பம் பூ - 2 மேஜைக்கரண்டி

    புளி - எலுமிச்சை அளவு

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 1

    பூண்டு - 6 பல்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பில்லை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    கடுகு - 1 தேக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    ரசப்பொடி - 2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.

    பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

    புளி கரைசலில் வெட்டிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கையால் நன்றாக பிசைந்துவிடவும்.

    தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

    இறுதியாக ரச கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

    இப்போது மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெடி.

    இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் வைத்து சாப்பிடலாம்.

    அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.

    • ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று வாழை இலை ரசம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறிய பிஞ்சி வாழை இலை - 1

    தக்காளி - 1

    காய்ந்த மிளகாய் - 3

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகு - ஒரு தேக்கரண்டி

    புளி - எலுமிச்சை அளவு

    பூண்டு - 8 பல்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க

    செய்முறை

    வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இளம் வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல் ,உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் ரெடி.

    இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

    • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
    • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நல்லி எலும்பு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் - 1/4 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி - கையளவு.

    மிளகு - தேவைக்கு ஏற்ப

    செய்முறை

    நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

    இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

    • புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    புதினா - 1 கட்டு

    புளிக்கரைசல் - ஒரு கப்

    கீறிய பச்சை மிளகாய் - 2

    வெந்த துவரம் பருப்பு - அரை கப்

    மிளகு, சீரகம், ரசப்பொடி – தலா 2 ஸ்பூன்

    தனியா - 1 டேபிள் ஸ்பூன்

    துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    புளிக்கரைசல் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    இதில் வறுத்து பொடித்த பொடி, புதினா ஆகியவற்றை சேர்க்கவும்.

    இரண்டு கப் தண்ணீர் எடுத்து வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும்.

    ரசம் பொங்கி, நுரைத்து வரும் பொது, கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான புதினா ரசம் ரெடி.

    ×