search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bitter Gourd Recipes"

    • பாகற்காயில் வைட்டமின் ஏ, கே சத்துகள் நிறைந்திருக்கின்றன.
    • இன்று பாகற்காய் ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - கால் கிலோ,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    புளி - கோலி அளவு,

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    காய்ந்த மிளகாய் - 3,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.

    பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் ரெடி.

    இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிண்ணத்தில் ஊற்றி சூப் போன்றும் குடித்தால், பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    சர்க்கரை நோயாளிகள், வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 300 கிராம்,
    வறுத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
    சின்னவெங்காயம் - 200 கிராம்,
    நல்லெண்ணெய் - 50மி.லி.,
    தக்காளி - 2,
    புளி - எலுமிச்சைப்பழ அளவு,
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்.




    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

    சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

    பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு ரெடி.

    சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை பாகற்காய் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பாகற்காய் - 1
    எலுமிச்சம்பழம் - பாதி
    காய்ச்சிய பால் - 1/2 கப்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க :

    சோம்பு - 1/4 தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பட்டை - 1
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

    கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்..

    சத்தான பாகற்காய் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாகற்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை. ஆனால், பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்யலாம். இதன் செய்முறை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்
    நல்லெண்ணெய் - 100 கிராம்
    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
    வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
    பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    கல் உப்பு - சுவைக்கேற்ப.
    வினிகர் - 150 மில்லி



    செய்முறை :

    பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.

    மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.

    மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

    பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.

    அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

    வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.

    நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.

    சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.

    குறிப்பு:

    பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.

    கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது. ஈர ஸ்பூன்கள் பயன்படுத்த கூடாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×