search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Soup"

    தினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
    காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
    பால் - ஒரு கப்,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 5 பல்,
    நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.

    2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

    விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

    சூப்பரான சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
    தண்ணீர் - தேவைக்கு
    துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
    நறுக்கிய பேபி கார்ன் - 1
    பட்டாணி - சிறிதளவு
    கேரட், மிளகாய் - 1
    உப்பு - தேவைக்கு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி



    செய்முறை :

    ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.

    ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

    சூப்பரான சத்தான கொத்தமல்லித் தழை சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1/2 கப்
    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
    கேரட் - 1
    ப்ரோக்கோலி - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்லு
    இஞ்சி - 1/2 இன்சி
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.

    காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

    காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை சுண்டைக்காய் - 50 கிராம்,
    வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப்,
    தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,  
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,  
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மிளகு - சீரகப்பொடி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

    பிறகு, உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகு, சீரகப்பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

    வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவும் நல்லது. இன்று கோஸ், கார்ன் சேர்த்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோஸ் - 150 கிராம்,
    ஸ்வீட் கார்ன் - 1/4 கப்,
    வெங்காயத்தாள் - 4,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    சிறிய பச்சைமிளகாய் - 1,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தாள், கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கோஸ் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் ஸ்வீட் கார்னை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, பச்சைமிளகாய், தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

    சிறிது வெந்ததும் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும்.

    2 நிமிடம் கழித்து இறக்கி, வெங்காயத்தாளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோஸ் ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இன்று ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ப்ரோக்கோலி - ஒரு கப்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப்,
    வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - ஒன்று,
    தைம் இலை (Thyme leaf) - சிறிதளவு,
    கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலி நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.

    கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    இதனுடன் தைம் இலை (Thyme leaf) சேர்த்து, நன்கு வதங்கியவுடன் சோள மாவு சேர்த்து வறுக்கவும்.

    பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.

    பிறகு ப்ரோக்கோலி சேர்த்து வேகவிடவும்.

    மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும்.

    வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.

    சத்து நிறைந்த ப்ரோக்கோலி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சுக்கு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு தூள் - 2 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    புதினா - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகு, சுக்கு தூள், சோம்பு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

    குக்கர் விசிவ்ல போனவுடன் மூடியை திறந்து சூப் வடிகட்டி புதினா தூவி சூப்பை பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான சுக்கு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேரட், மிளகு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகு - 1 டீஸ்பூன்
    பாசிப்பருப்பு - 100 கிராம்
    பிரியாணி இலை - சிறிதளவு
    வெங்காயம் - 1
    கேரட் - 3
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பிரியாணி இலையை போட்டு கிளறவும்.

    அதனுடன் வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்.

    மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி போதுமான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.

    4 விசில் வந்ததும் இறக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு இறக்கி மிதமான சூட்டில் பருகலாம்.

    சூப்பரான கேரட் - மிளகு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஊற வைத்த கொள்ளு - 100 கிராம்,
    பூண்டு - 2 பல்,
    பட்டை, லவங்கம் - தலா ஒன்று,
    வெண்ணெய் - சிறிது,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவைக் கேற்ப.



    செய்முறை :  

    கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.

    வேகவைத்தவற்றை நன்றாக மசித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

    வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும்.

    சத்து நிறைந்த கொள்ளு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 50 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    புதினா - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கடைசியாக அதில் புதினா சேர்த்து கிளறி, மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை பாகற்காய் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பாகற்காய் - 1
    எலுமிச்சம்பழம் - பாதி
    காய்ச்சிய பால் - 1/2 கப்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க :

    சோம்பு - 1/4 தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பட்டை - 1
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

    கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்..

    சத்தான பாகற்காய் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது. இன்று சத்தான பப்பாளியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளி பழம் - சிறியது  
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    வெங்காயம் - ஒன்று
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்
    மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் வெங்காயம், இஞ்சி, பப்பாளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... மிளகுத்துள், கொத்தமல்லி தூவி பருகவும்.

    சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×