search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barley Soup"

    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1/2 கப்
    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
    கேரட் - 1
    ப்ரோக்கோலி - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்லு
    இஞ்சி - 1/2 இன்சி
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.

    காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

    காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு வலுசேர்க்க தினமும் ஏதாவது ஒரு சூப்பை குடிப்பது நல்லது. இன்று காளான், பார்லி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 100 கிராம்
    பார்லி - 50 கிராம்
    பட்டர் / எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு - 4 பல்
    தக்காளி - ஒன்று
    ரசப்பொடி - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு
    சத்து மாவு - 2 தேக்கரண்டி
    ஃப்ரஷ் ஒரிகனோ - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது



    செய்முறை :

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    தக்காளி, காளானை சிறுத்துண்டுகளாக நறுக்கவும்.

    பார்லியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, காளான் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்..

    சத்து நிறைந்த காளான் பார்லி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×