search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crab Recipes"

    • இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
    • நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.

    தேவையான பொருள்கள்:

    கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    முழுப் பூண்டு - 1

    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

    காய்ந்த மிளகாய் - 4

    தக்காளி - 2

    புளி - நெல்லிக்காய் அளவு

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தேங்காய்ப் பால்- 50 மில்லி

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

    செய்முறை:

    நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

    ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

    மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

    இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும்.
    • தோசை, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ,

    தக்காளி - ஒன்று,

    சின்ன வெங்காயம் - 25 கிராம்,

    பச்சை மிளகாய் (சிறியது) - 2,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று,

    குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய் - கால் மூடி,

    மிளகு - ஒரு டீஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.

    தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    சுத்தம் செய்த நண்டுடன் குழம்பு மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்க்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பிசிறி வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    இது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் இறக்கினால்... சுவையான நண்டு மசாலா தயார்.

    சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சூப்பர் காம்பினேஷன்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    வெங்காயம் - 4
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய் - அரை முடி
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு, பட்டை, சோம்பு, கசகசா, மிளகு தூள் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள்.

    ஐந்து நிமிடம் கழித்து அரைத்துவைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர்  ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

    பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.

    நண்டு குருமா ரெடி.

    குறிப்பு - தேங்காய் பாலும் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு சமையலில் நண்டு குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    மிளகு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்ம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

    நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×