என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Non Veg"
- துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
- உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது.
லிப்ஸ்டிக், நகப்பாலீஷ், முகத்திற்குப் பூசப்படும் அழகு சாதன பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், மேல் பூச்சு மருந்துகள்... இப்படி அனைத்தையும், அனைத்திலும் சிவப்பு நிறத்தை பார்க்கும் நாம், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவதில்லை.
மேற்கூறிய அனைத்துப் பொருட்களிலும் சிவப்பு நிறத்திற்காகக் கலக்கப்படும் நிறமி ஒரு வகையான பூச்சிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
கோச்சினீல் பக் என்னும் ஒரு வகையான ஒட்டுண்ணி பூச்சியில்தான் இந்த சிவப்பு நிறமி இருக்கிறது. காக்ட்ஸ் வகை (கள்ளி) செடிகளில் வெள்ளை நிற கூட்டுடன் வாழும் இப்பூச்சிகளை கசக்கினால், கைகளில் சிவப்பு நிறம் கிடைக்கும். உலர வைத்த இப்பூச்சிகளை அலுமினியம் அல்லது கால்சியம் உப்புடன் சேர்த்துப் பின் பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நிற மைக்கு "கார்மைன்" அல்லது "காக்கினியல் மை" என்று பெயர் வைத்துள்ளார்கள்.
துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களானாலும் அதனுடைய மேல் அட்டையில் (லேபிள்) E 120, Natural Red 4, Carmine, Cochineal, Carminic acid என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
ஒருவேளை இந்த சிவப்பு நிறமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் E 124 என்று குறிப்பிடவேண்டும்.

உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் இந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது. ஆனால், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே ஜெல்லி மிட்டாய்கள், கேண்டீஸ், சாக்லேட், போன்றவை அதிக அளவில் சிவப்பு நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.
பதப்படுத்தப்பட்ட மாமிசம், குளிர்பானங்கள், பழ ரசங்கள், ஆற்றல் தரும் பானங்கள், உணவுப் பொடிகள், இனிப்பு தயிர், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், சூயிங்கம், சாக்லேட், கற்கண்டு வகை இனிப்புகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள், உலர் சூப் பொடி, கெச்சப், மதுபானங்கள்...... என்று இவை அனைத்திலும் இந்த நிறம் இருக்கும்.
ஒருவேளை.... அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அது இந்த பூச்சியினாலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-வண்டார் குழலி
- அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
- கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டது.
நெல்லை:
பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப் பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண் டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங் கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.
ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையி லேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.
நெல்லையில் டவுன், தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், சீவலப்பேரி சாலை உள்பட அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.
நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட் டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.
பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயர வில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும் விற்கப்பட்டது.
- இறைச்சி, மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
- இறைச்சி, மீன் வகைகளில் கொரோனா வைரஸ் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும்.
கொரோனா வைரஸ் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தப்படும் இறைச்சி, மீன் வகைகளில் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் சால்மன் வகை மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இறைச்சி மற்றும் மீன் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், பிரீசரில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் ஆராய்ச்சியாளர்கள் சேமித்துவைத்தனர்.
அப்படி குளிர்ந்த நிலையில் வைக்கப்படும் இறைச்சி வகைகளில் வைரஸ்கள் வளரக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார், ஆராய்ச்சியாளர் பெய்லி. தென்கிழக்கு ஆசியாவில் பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சி பொருட்கள் வைரஸ் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல் பரவியதை அடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறுகிறார், பெய்லி.
இதேபோன்ற சூழலில் வைரஸ் உயிர்வாழ முடியுமா, இல்லையா என்பதை ஆராய்வதே எங்கள் குறிக்கோள் என்றும் சொல்கிறார். ஆய்வின் முடிவில் குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி வகைகளில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கோவிட்-2 வைரஸ் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிக்கன் - 250 கிராம்,
வரமிளகாய் - 10,
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
உப்பு - தேவைக்கு.
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமாக தீயில் வேக விடவும்.
அடுத்து அதில் பொடித்த மசாலாவை போட்டு நன்றாக கிளறி விடவும்.
சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
நண்டு - 250 கிராம்.
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க…
சாம்பார் வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 3,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,

செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.
மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.
கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.
பர்கர் பேட்டி செய்ய…
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
வெங்காயம் - 1,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
பிரெட் தூள் - 1 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
பர்கர் பரிமாற…
பர்கன் பன் - 4,
சீஸ் ஸ்லைஸ் - 4,
மையோனஸ், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,

செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த சிக்கன் கலவையில் சிறிதளவு எடுத்து கட்லெட் போன்று தட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பர்கர் பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பன்னில் உட்புறம் வெண்ணெய் தடவி, செய்த பர்கர் (கட்லெட்) பேட்டியை அதன் நடுவில் வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து மூடி பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.
இறால் - 250 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
பச்சைமிளகாய் - 5,
சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,

செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான இறால் சுக்கா ரெடி.
சிக்கன் - 500 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் கிரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.
ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும்.
இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.
சூப்பரான தவா சிக்கன் தயாராகிவிட்டது.
முட்டை - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
புளி - பெரிய நெல்லி அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 15 பல்
மஞ்சள் தூள் - தேவைக்கு
தனி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
அடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.
பின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.
குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான முட்டை சால்னா ரெடி.
பின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
தேவையான பொருட்கள் :
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்
காராமணி - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்

செய்முறை :
காராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.
காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
பழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)
அதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
அனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.
சூப்பரான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் ரெடி.