search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு பொங்கலையொட்டி இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்
    X

    முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள கடையில் இறைச்சி வாங்க திரண்ட கூட்டம்.

    மாட்டு பொங்கலையொட்டி இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

    • அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
    • கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப் பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண் டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங் கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.

    ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையி லேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    நெல்லையில் டவுன், தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், சீவலப்பேரி சாலை உள்பட அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.

    நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட் டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.

    பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயர வில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும் விற்கப்பட்டது.

    Next Story
    ×