search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Savarkar"

    • சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தியபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
    • இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தியின் சுடரை ஏற்றிவைத்தார் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சாவர்க்கரின் பிறந்தநாள இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய பாராளுமன்றத்தில் உள்ள சாவர்க்கரின் திருவுருவப் படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாவர்க்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினர். 

    சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தியபின், உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், சாவர்க்கர் தன் எண்ணங்களால் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தியின் சுடரை ஏற்றிவைத்தார், என குறிப்பிட்டுள்ளார். வீர் சாவர்க்கரின் தேசபக்தி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கது என்றும், எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    சாவர்க்கர் மகாராஷ்டிராவில் 1883இல் மே 28ம் தேதி பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட இவர், இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளால் வீர் சாவர்க்கர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

    • மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டார் என பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின.
    • தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவது தவறு என்றார் சாவர்க்கர் பேரன்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இதனால் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டார் என பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் சாவர்க்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என அவருக்கு சவால் விடுகிறேன்.

    தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவது தவறானது மற்றும் வருந்தத்தக்கது. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • சாவர்க்கர் சிறையில் சித்தரவதை அனுபவித்தார்.
    • அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    நாக்பூர்:

    சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:

    இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் மட்டுமே. அவர் சித்திரவதைகள் நிறைந்த சிறை தண்டனையை அனுபவித்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் நிம்மதியாக கழித்தனர். எனவே, (அவரது ) தேசபக்தியை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது, மனிதாபிமானமற்றது.

    உங்களால் அவரை மதிக்க முடியாவிட்டால், அவரை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அனைத்து சாதியினரும் மதிக்கப்படுகிறார்கள். தீண்டாமை என்பது அதர்மம், பாவம். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவை பேச்சுவார்த்தை நடத்துமாறு மகாத்மா காந்தி தெரிவிக்கவில்லை.அப்படி நடத்தியிருந்தால் நாடு பிரிக்கப்பட்டிருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புரட்சியையும் கவிதையையும் ஒருசேர சிறப்பாக கையாண்டவர் வீர சவர்க்கார் என பிரதமர் நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார். #mankibhat #veerSavarkar
    புதுடெல்லி:

    ‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

    இன்றைய உரையில் பாரதத்தின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு மற்றும் வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் ஆகியோருக்கு அவர் புகழாஞ்சலி செலுத்தினார்.

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னர் சுட்டிக்காட்டியதை இன்று மேற்கோள் காட்டிய மோடி, புரட்சியையும் கவிதையையும் ஒருசேர சிறப்பாக கையாண்டவர் வீர சவர்க்கார் என குறிப்பிட்டார். #mankibhat #veerSavarkar
    ×