search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angalaman temple"

    • பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
    • அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே மேல்தனி யாளம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி ராஜீவ்காந்தி (வயது 36) வழக்கம்போல நேற்றிரவு பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். மேலும், அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை. இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ராஜீவ்காந்தி புகாரளி த்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், மேல்தனியாளம்பட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×