search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyers"

    • பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
    • வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

    நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .

    இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.

    எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    • வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.
    • நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வரும் அருள்மணி என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பாளை கே.டி.சி. நகர் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரை இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் தடுத்து நிறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட தாகவும் புகார் எழுந்தது.

    இதையடுத்து வக்கீல்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் நேற்று வக்கீலால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக கூறி போலீஸ் ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதற்கிடையே வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து இருப்பதாக கூறி நெல்லை மாவட்ட வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏட்டு பிபினை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்கள்.

    இந்நிலையில் அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பாரதி முருகன், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் முத்துராஜ், உதயகுமார் வழக்கறிஞர்கள் முன்னாள் செயலாளர் செந்தில் குமார் அமல்ராஜ், வினோத் குமார், ராஜா முகமது, லெட்சுமணன், ரமேஷ்,இசக்கி, கார்த்திக், தம்பான், அருண்குமரன், ராஜன்,அஜீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற பணியை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வக்கீல்கள் சங்கத்தினர் உள்ளிட்ட யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 முக்கிய சட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது.

    நெல்லை:

    இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வதற்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

    இதனை எதிர்த்து நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற பணியை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.

    இதில் கலந்துகொண்ட வக்கீல்கள் கூறுகையில், மத்திய அரசு சட்டவியல் நிபுணர்கள், பார் கவுன்சில்கள், உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வக்கீல்கள் சங்கத்தினர் உள்ளிட்ட யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 முக்கிய சட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது.

    இதனை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது வக்கீல்களின் தொழில் முறைக்கு எதிரானது என்று கூறி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் வக்கீல்கள் சுதர்சன், செந்தில்குமார், ஜாபர் அலி, பிரபாகரன் மற்றும் வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
    • சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் சிவபிரகாசம், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ரகுபதி, நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன் செயலாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்ய பணம் தருவதாக கூறியுள்ளார்
    • நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜோசப் ராஜ ஜெகன். வக்கீல். இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது அலுவல கத்திற்கு வந்து கதவை திறந்த போது அங்கு அருகில் நின்றி ருந்த மர்ம நபர் அவரை தலையில் வெட்டினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரையும், அவரது கூட்டாளி ஒருவ ரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

    கூலிப்படையினர்

    போலீசார் நடத்திய விசாரணையில் வக்கீல் ஜெகனை வெட்டிக் கொல் வதற்காக வந்தவர்கள் கூலிப்படையினர் என்றும், சம்பவ இடத்திற்கு 3 பேர் வந்ததாகவும் ஒருவர் தப்பிவிட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீ சார் நடத்திய விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்வதற்காக மூன்றடைப்பை அடுத்த பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து தாங்கள் வக்கீலை கொல்ல வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோர்ட்டு புறக்கணிப்பு

    இந்நிலையில் வக்கீல் ஜெகன் கூலிப்படை யினரால் கொடூரமாக தாக்கப் பட்டதை கண்டி த்தும், சம்பந்தப் பட்ட வர்களை உடனே கைது செய்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் நீதிமன்ற பணி களை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் சேர்மன் ஜவகர்லால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குழுமத்தின் துணைத்தலைவர் கார்த்திகேயன், செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மைக்கேல், வக்கீல்கள் ராம்நாத், சிவசுப்பிரமணியன், பரிமளம், ராஜா முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நெல்சன் நன்றி கூறினார்.

    • புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகி யோர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகி யோர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    தமிழக, புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு முடிவின்படி இந்த போராட்டம் நடந்தது. தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    மதுரை வக்கீல்களை தாக்கிய போலீசாரை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு சட்டத்தை தாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

    வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
    • அதன்படி இன்று பவானியில் 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் தாண்டவன், செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    பவானி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் மற்றும் பொருளாளருமான விஜயகுமார் 22-ம் தேதி காலை அவரது சொந்த ஊரான ரெட்டிபாளையம் பொது வழியில் வழிமறித்து வழக்கின் எதிர் தரப்பிரான ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வக்கீல் விஜயகுமார் வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கண்டித்தும், வழக்கறிஞர்களின் தொழிலுக்கு எவ்வித பாதுகாப்பும், உத்தரவா தமும் இல்லாத நிலையை கண்டித்தும், நமது செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பா ளர்களின் கருத்தினை கேட்டு அதன் அடிப்ப டையில் இன்று ஒரு நாள் மட்டும் பவானி வழக்கறிஞர் சங்க வக்கீல்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அதன்படி இன்று பவானியில் 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
    நெல்லை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லையில் இன்று அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி மாணவ- மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வழக்கம் போல் வகுப்பிற்கு வந்த மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியவாறு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

    இன்று மதியம் வரை இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் இன்று காலை மாணவ-மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். இந்திய மாணவர் சங்க மாநகர செயலாளர் சிவா தலைமையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றார்கள்.

    நெல்லை கோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். பொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க செயலாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மந்திர மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் வக்கீல்கள் சுதர்சன், கந்தசாமி, ரமேஷ், துரை, மீனாட்சி சுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். #PollachiCasse
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் 2,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
    கோவை:

    தமிழகம் மற்றும் புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (19-ந்தேதி) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 2, 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு நடைபெறும் என்று வக்கீல்கள் கூறினர். #PollachiCase

    பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.

    பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மேரி ஜெமிலா வெற்றி கொடி, சாந்த குமாரி, கண்மணி, சுசித்திரா, சுபாஷினி, கேத்தரின் ஜெனிபர், வள்ளி பார்க்கவி, ஜமுனாராணி, ஜெயவீரபாண்டியன், அண்ணாதுரை, காமராஜ், சிவா வெங்கட் நாராயணன் தீபாகரன், நடேசன், மற்றும் வழக்கறிஞர் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். #PollachiAbuseCase
    ×