search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    கோப்பு படம்.

    புதுவை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகி யோர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகி யோர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    தமிழக, புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு முடிவின்படி இந்த போராட்டம் நடந்தது. தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    மதுரை வக்கீல்களை தாக்கிய போலீசாரை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு சட்டத்தை தாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

    வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×