search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    நெல்லையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்ய பணம் தருவதாக கூறியுள்ளார்
    • நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜோசப் ராஜ ஜெகன். வக்கீல். இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது அலுவல கத்திற்கு வந்து கதவை திறந்த போது அங்கு அருகில் நின்றி ருந்த மர்ம நபர் அவரை தலையில் வெட்டினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரையும், அவரது கூட்டாளி ஒருவ ரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

    கூலிப்படையினர்

    போலீசார் நடத்திய விசாரணையில் வக்கீல் ஜெகனை வெட்டிக் கொல் வதற்காக வந்தவர்கள் கூலிப்படையினர் என்றும், சம்பவ இடத்திற்கு 3 பேர் வந்ததாகவும் ஒருவர் தப்பிவிட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீ சார் நடத்திய விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்வதற்காக மூன்றடைப்பை அடுத்த பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து தாங்கள் வக்கீலை கொல்ல வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோர்ட்டு புறக்கணிப்பு

    இந்நிலையில் வக்கீல் ஜெகன் கூலிப்படை யினரால் கொடூரமாக தாக்கப் பட்டதை கண்டி த்தும், சம்பந்தப் பட்ட வர்களை உடனே கைது செய்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் நீதிமன்ற பணி களை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×