என் மலர்
நீங்கள் தேடியது "மன்னார்குடி"
- ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின
- விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.
மன்னார்குடி:
மேட்டூர் அணை இந்த ஆண்டு (2025) வழக்கம் போல் ஜூன் மாதம் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டது.
இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சாகுபடியும் அமோக விளைச்சலை தந்தது, அறுவடை நேரத்தில் மழையும் ஒத்துழைப்பு நல்கியது. விவசாயிகள் அனைவரும் குறித்த நேரத்தில் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து விட்டனர்.
சிறு, குறு விவசாயிகள் மழை வருவதற்கு முன்னதாக அறுவடை செய்தாலும், அந்த நெல்லை விற்பதற்கு வழி இல்லாமல் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.
அறுவடைக்கு முன்பு மழையில் இருந்து தப்பித்த விவசாயிகள், தற்போது அறுவடை முடிந்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல்லும், மூட்டைக்கட்டி அடுக்கி வைக்கப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து வீணாகிறது.

இதேபோல், ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தீபாவளி நேரத்தில் புத்தாடை வாங்க பணம் கிடைக்கும் என்று நினைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு மாறாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. நெல் கொள்முதலுக்கு ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டால் இதுவரை 12 ஆயிரம் நெல்மூட்டைகள் பிடித்திருக்கிறோம். ஆனால், 7 ஆயிரம் நெல் மூட்டைகளை தான் குடோன்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மீதமுள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் அப்படியே கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது என்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள் தான்.
கோட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 4 லட்சம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் கோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளை அனுப்பி ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி.
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.
paபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் போன்றே 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பல்வேறு பாடங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை வாழ்த்தி கொண்டாடிவது வழக்கம்.
இந்நிலையில், மன்னார்குடியில் மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றதற்கு ஊர் மக்களே ஒன்றுக்கூடி கொண்டாடி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மணிகண்டன் என்ற மாணவன் தனது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச பாஸ் மார்க் எடுத்து 10ம் வகுப்பை தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று 500க்கு 210 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனால், மாணவர் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி ஊர் மக்கள் கொண்டாடியுள்ளனர்.
- ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
மன்னார்குடி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல்அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டது.
- நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
அதன்படி மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் (அன்னதானம்) வழங்கப்பட்டது. நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
மன்னார்குடி அரசினர் மருத்துவமனையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர்கள் என்.விஜயகுமார், கோவிந்தராஜன், அசோகன் ஆகியோர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
மன்னார்குடி சஞ்சீவிராயர் தெருவில் உள்ள சஞ்சீவிராயன் வளாகத்தில் 28 ஏழை ெபண்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கி அன்னதானம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மேற்படி விழாக்களில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் டி.ரெங்கையன், மண்டல இணை இயக்குனர் கால்நடை டாக்டர் ஐ.தனபாலன், மருத்துவமனை டாக்டர் ராகவி, உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார், ரோட்டரி கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கால்நடை அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் முன்னாள் தலைவர்கள் கே.திருநாவுக்கரசு, எம்.நடராஜன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், உடனடி தலைவர் சி.குருசாமி, என்.சாந்தகுமார், ஆர்.கே.பாலகுணசேகரன், பொருளர் டி.அன்பழகன், ஹரிரவி, பன்னீர்செல்வம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலர் வி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ரோட்டரி 2981 மாவட்டத்தில் உள்ள 137 சங்கங்களில் கால்நடைகளுக்கு அன்னதானம் வழங்கிய முதல் சங்கம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் என்பது குறிப்பிடதக்கது.
- 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.
- சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நேர்காணல் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள் நல சங்கம், தமிழ்நாடு மாற்றதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.
மாற்றுதிறனாளிகள் நல சங்க தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாற்று திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மசந்திரன், மாநில பொதுசெயலாளர் பொன்னுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தன்னார்வலர்கள் நடத்தும் இந்த திருமண சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பொன்வாசுகிராம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் வாசுதேவ் நன்றி கூறினார்.






