மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி

200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆசீர்வதித்தார்.
மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆசீர்வதித்தார்.
Published on

மன்னார்குடி:

மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நேர்காணல் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள் நல சங்கம், தமிழ்நாடு மாற்றதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.

மாற்றுதிறனாளிகள் நல சங்க தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாற்று திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மசந்திரன், மாநில பொதுசெயலாளர் பொன்னுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தன்னார்வலர்கள் நடத்தும் இந்த திருமண சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பொன்வாசுகிராம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் வாசுதேவ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com