search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police attack"

    • வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.
    • நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வரும் அருள்மணி என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பாளை கே.டி.சி. நகர் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரை இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் தடுத்து நிறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட தாகவும் புகார் எழுந்தது.

    இதையடுத்து வக்கீல்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் நேற்று வக்கீலால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக கூறி போலீஸ் ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதற்கிடையே வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து இருப்பதாக கூறி நெல்லை மாவட்ட வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏட்டு பிபினை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்கள்.

    இந்நிலையில் அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பாரதி முருகன், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் முத்துராஜ், உதயகுமார் வழக்கறிஞர்கள் முன்னாள் செயலாளர் செந்தில் குமார் அமல்ராஜ், வினோத் குமார், ராஜா முகமது, லெட்சுமணன், ரமேஷ்,இசக்கி, கார்த்திக், தம்பான், அருண்குமரன், ராஜன்,அஜீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் வீரையனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவர் துவரங்குறிச்சி- அதிராம்பட்டினம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு தன் ஊருக்கு திரும்பி உள்ளார்.

    அவரை வழி மறித்த கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி திருட்டு தனமாக அதிக விலைக்கு விற்கிறாயா? என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீரையன் மகன் முருகேசனுக்கு தகவல் கொடுக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்து தனது தந்தையை அழைத்து சென்றார்.

    வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரையன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தகவல் அறிந்தும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது சாவிற்கு நீதி கிடைக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்றும், மரணத்திற்கு காரணமான கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6 மணி நேரம் நடந்த இந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் போலீசார் சென்றனர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் போலீசாரை அனுப்பும்படி தகவல் கொடுத்தனர்.

    பண்ணை வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதில் போலீஸ் அதிகாரிகள் ரஷெல் மெக்கிரவ்ன் மற்றும் மேத்திவ் அர்னால்டு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்த நபர் அந்த பண்ணை வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அப்போது, அந்த நபர் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    6 மணி நேரம் நடந்த இந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், இந்த மோதலில் 2 போலீசார், 1 பொதுமக்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

    மேலும், சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் மீது தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோட்டூர்புரம் அருகே குடிபோதையில் போலீஸ்காரர்ரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கோட்டூர்புரம் பகுதிக்கு சென்றார். அங்கு மது குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். அவர்களிடம் விஷ்ணு தகராறில் ஈடுபட்டார். திடீரென்று அவர் ஒரு போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.

    மின்சார ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். #arrest

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு நேற்று மாலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    ஒரு பெட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது, இதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீஸ்காரர் சந்திரசேகர் அந்த மாணவர்களை தட்டிக் கேட்டார்.

    ‘‘மற்ற பயணிகளுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? அமைதியாக வாருங்கள்’’ என்று கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்த போது, தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீஸ்காரர் சந்திரசேகரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீஸ்காரரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்கள் அஜித், வின்சென்ட், சுமன்குமார், ஷியாம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான 4 மாணவர்கள் மீதும் போலீஸ்காரரை தாக்கியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #arrest

    பாளையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியவரை கைது செய்த ஆத்திரத்தில் போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி தப்பி செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நெல்லை;

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்தவர் நங்கமுத்து (23). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று நள்ளிரவு இவர் ஆட்டோவில் பாளையில் இருந்து முறப்பநாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கே.டி.சி. நகர் அருகே சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது ஆட்டோ லேசாக இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவரும், அந்த பகுதியில் சாலையில் நின்றவர்களும் கத்தி சத்தம் போட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் பாளை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்கள் சத்தம் போடுவதையும், ஆட்டோ வேகமாக வருவதையும் பார்த்து சுதாரித்து ஆட்டோவை மறித்து பிடித்தனர்.

    அப்போது ஆட்டோ டிரைவர் நங்கமுத்து குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த ஆட்டோவை பாளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறு அருகில் நின்ற போலீஸ்காரர் ஆரோக்கிய சாமியிடம் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் கூறினார்.

    இதனால் போலீஸ்காரர் ஆரோக்கியசாமி அந்த ஆட்டோவை பாளை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது நங்கமுத்து ஆட்டோவை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் சென்ற முறப்பநாட்டை சேர்ந்த அவரது நண்பர்கள் மகராஜன் (24), இசக்கிதுரை (29), ஆறுமுககனி, லட்சுமணன் ஆகிய 4 பேரும் நங்கமுத்து ஆட்டோவை மறித்து ‘எங்கள் நண்பர் ஆட்டோவை எங்கே கொண்டு செல்கிறீர்கள்’ என்று போலீஸ்காரர் ஆரோக்கியசாமியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது போலீஸ்காரர் ஆரோக்கியசாமி, ‘தான் போலீஸ்காரர், அவரை கைது செய்து, ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ்காரர் ஆரோக்கிய சாமியை சரமாரி அடித்து உதைத்து, ஆட்டோவை அவர்கள் மீட்டு செல்ல முயன்றனர்.

    அப்போது போலீஸ்காரர் ஆரோக்கியசாமி மைக்கில் தகவல் தெரிவித்ததால், சப்- இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், ஆரோக்கியசாமியை தாக்கியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் போலீஸ்காரர்கள் தப்பி ஓட முயன்ற மகாராஜன், இசக்கிதுரை ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆறுமுககனி, லட்சுமணன் ஆகிய 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் புகாரின் பேரில் போலீஸ்காரர் ஆரோக்கிய சாமியை தாக்கியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து ரகளை செய்ததாகவும், பாளை போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைதான 3 பேர்களை தவிர மற்ற 2 பேர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை அடித்து எழுப்பியதால் போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை விழுந்தது.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். திருப்பதிக்கு செல்லும் பயணிகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்து பஸ்களில் ஏறுகின்றனர். மேலும் இங்கிருந்து சென்னை, திருச்சி, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் செல்வதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பலர் புற காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்துமிடத்தில் தூங்குவார்கள். திருட்டு போன்றவற்றை தடுக்க தினமும் வடக்கு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட வேலூர் வடக்கு போலீஸ் ஏட்டு ஸ்ரீதர் என்பவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து எழுப்பியதாக கூறப்படுகிறது.

    எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, ஏட்டு ஸ்ரீதர் அடித்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர், நான் எல்லை பாதுகாப்பு படை வீரர் எதற்கு அடித்து எழுப்புகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் ஏட்டு ஸ்ரீதர், மூதாட்டி ஒருவரை தனது காலால் உதைத்து எழுப்பியதாக தெரிகிறது. இதைப்பார்த்த பயணிகள் ஆத்திரமடைந்து ஸ்ரீதரை அடித்து, உதைத்தனர். அப்போது அங்கு வந்த ஊர்க்காவல் படை வீரர், பயணிகளை தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் அவரை அடிப்பதை நிறுத்தவில்லை.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தினார்கள். மேலும், ஸ்ரீதரை அங்கிருந்து போலீசார் அழைத்துச் சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஓட்டலில் ‘ஆம்லெட்’ கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மாரியப்பன் (வயது 30). இவர் காடுபட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாரியப்பன், கூடக்கோவில் அருகே உள்ள கல்லனை பகுதி ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அங்கு அவரது ஊர்க்காரர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும், கடை உரிமையாளர் நெடுங்குளம் பாலனுக்கும் ‘ஆம்லெட்’ தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் மாரியப்பன் தலையிட்டு, ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாலன், அவரது உறவினரான தொழில் அதிபர் முருகன் (43), அவரது மகன்கள் பெருமாள் (24), சதீஷ் (22) ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் மாரியப்பனை கம்பியால் தாக்கினர்.

    இதில் தலை மற்றும் கால் மூட்டில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பெருமாள் மற்றும் சதீஷ் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சு- தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒடுக்க போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். 5 ஐ.ஜி.க்கள், 7 டி.ஐ.ஜி.க்கள் என ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டனர். இருந்த போதிலும் தூத்துக்குடியில் ஆங்காங்கே தீவைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன.

    இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கமாண்டோ வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப தொடங்கியது.

    இதையடுத்து தூத்துக்குடியில் குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த போலீசார் அவர்களது ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    நகரின் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட நிலையில் பதற்றமான பகுதியாக கருதப்படும் பாத்திமாநகர், திரேஸ்புரம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார், அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் தங்கியுள்ளனர்.


    இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அதனை எச்சரிக்கையாக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி மோதல் நடந்த போது போலீஸ்காரர்களை, போராட்டக்காரர்கள் ஆவேசமாக கற்களை வீசி தாக்குல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடந்த பிறகும் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு ஆயிரக்கணக்கான போலீசார் தூத்துக் குடியில் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை தடுத்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. இருந்த போதிலும் போலீசார் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியது, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்கள் இன்னும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆகவே ஒரு கும்பல் போலீசாரை தாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக அந்த கும்பல் நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கடல் வழியாக படகு மூலம் தூத்துக்குடிக்கு வரவழைத்து இருப்பதாகவும், வெடிகுண்டுகளை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அவர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்கியுள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் சில போலீஸ் நிலையங்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் பல்வேறு தாக்குதல் திட்டங்கள் குறித்து தகவல் சேகரித்துள்ள உளவுத்துறை போலீசார், அதுபற்றி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

    அதன்படி போலீசாரை தாக்க திட்டமிட்டுள்ள கும்பல் பற்றி ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ள இடங்களில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். #Thoothukudifiring #SterliteProtest
    ×