search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கோட்டையில் போலீஸ் தாக்கியதில் கூலிதொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்
    X

    பட்டுக்கோட்டையில் போலீஸ் தாக்கியதில் கூலிதொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்

    • வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் வீரையனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவர் துவரங்குறிச்சி- அதிராம்பட்டினம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு தன் ஊருக்கு திரும்பி உள்ளார்.

    அவரை வழி மறித்த கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி திருட்டு தனமாக அதிக விலைக்கு விற்கிறாயா? என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீரையன் மகன் முருகேசனுக்கு தகவல் கொடுக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்து தனது தந்தையை அழைத்து சென்றார்.

    வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரையன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தகவல் அறிந்தும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது சாவிற்கு நீதி கிடைக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்றும், மரணத்திற்கு காரணமான கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    Next Story
    ×