என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ABVP"

    • மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.
    • கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.  நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இடதுசாரி கூட்டணியிலிருந்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய குழு தலைவராக AISA வேட்பாளர் அதிதி மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    DSF வேட்பாளர் சுனில் யாதவ் பொதுச் செயலாளர் பதவியையும், AISA வேட்பாளர் டேனிஷ் அலி இணைச் செயலாளர் பதவியையும் வென்றார்.

    SFI அமைப்பின் வேட்பாளர் கே. கோபிகா பாபு துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றடுள்ளன.

    எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது. 

    • வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
    • ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த பேரணியை நடத்தியது.

    ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.

    இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.

    முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது. 

    • தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து போலீசார் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்தார்.
    • அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது.

    இந்நிலையில் மாணவர் யூனியனின் இணை செயலாளரான தீபிகா ஜா மற்றும் 2 ஏபிவிபி உறுப்பினர்கள் நேற்று ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    தீபிகா ஜா ஆசிரியரின் கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வடக்கு வளாகத்தில் செயல்படும் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சுஜித் குமார் என்ற அந்த ஆசிரியர் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அண்மையில் கல்லூரி கவுன்சில் தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள்  தாக்கியது குறித்து அலுவலக அறையில் போலீசார் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சக ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.  

    • மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.
    • பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அணி ஆகும்.

    மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்கள் மூவர், கல்லூரி மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக படம் பிடித்த புகாரில் கைது செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று புகார் அளித்த பான்புரா போலீசில் புகார் அளித்தார்.

    செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்ற இளைஞர் விழாவின் போது ஏபிவிபி தலைவர்கள் பெண் மாணவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

    மாணவிகள் இந்த சம்பவத்தைப் பற்றி புகார் அளித்ததை அடுத்து, கல்லூரி அதிகாரிகள் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர். மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ABVP உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி மற்றும் கல்லூரி மாணவர் இணை தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பன்புரா போலீசார் தெரிவித்தனர்.

    • தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளை ஏபிவிபி பிடித்தது.
    • துணைத் தலைவர் பதவிக்கான பேட்டியில் காங்கிரஸ் ஆதரவு NSUI வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (DUSU) தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2.75 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 52 மையங்களில் 195 வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 711 EVMs ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 39.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ்.-யின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ஏபிவிபி- ABVP) முக்கிய பதவிகளை பிடித்தது.

    தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவியை பிடித்த நிலையில், காங்கிரஸ் ஆதரவு NSUI துணைத் தலைவர் பதவியை பிடித்தது.

    ABVP-யின் ஆர்யன் மான் தலைவர் பதவியில் 28841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். NSUI சார்பில் போட்டியிட்ட ஜோஸ்லின் சவுத்ரி 12654 வாக்குகள் பெற்றார்.

    துணைத் தலைவருக்கான போட்டியில் NSUI சார்பில் போட்டியிட்ட ராகுல் ஷன்ஸ்லா 29339 வாக்குகளும், ஏபிவிபி-யின் கோவிந்த் தன்வர் 20547 வாக்குகள் பெற்றனர்.

    தலைவர்- ஆர்யன் மான் (ஏபிவிபி)

    துணைத் தலைவர்- ராகுல் ஜன்ஸ்லா (NSUI)

    செயலாளர்: குணால் சவுத்ரி (ஏபிவிபி)

    இணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)

    ஆர்யன் மான் ஹரியானா மாநிலம் பஹதுர்காவைச் சேர்ந்தவர். ஹன்ஸ்ராஜ் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நுலக அறிவியல் முதுகல பட்டம் படித்து வருகிறார்.

    • டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
    • டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவு செப். 22-ம் தேதி நடந்தது.

    டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை சேர்ந்தவர் துணை தலைவர் பதவியை வென்று இருக்கிறார்.

    செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 52 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் தங்களது வாக்கை செலுத்தினர்.

     

    இந்த தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் என நான்கு பதவிகளுக்கான போட்டி நடைபெறும். பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்த 24 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

    இதில் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.), அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.ஏ.), இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டனர். டெல்லி மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

    • ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் 2598 வாக்குகள் பெற்றார்.
    • ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்றார்.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த இடதுசாரி குழு, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ABVP) ஆகிய இரண்டு அணிகள் போட்டியிட்ட ஒருங்கிணைந்த இடதுசாரி குழு ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் (AISA) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த அணி சார்பில் தனஞ்ஜெய் போட்டியிட்டார். ஏபிவிபி சார்பில் உமேஷ் சி அஜ்மீரா போட்டியிட்டார்.

    இதில் தனஞ்ஜெயா 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    தனஞ்ஜெயா பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996-97-ல் பட்டி லால் பைர்வா என்பவர் மாணவர்கள் சங்கம் தேர்தல் வெற்றி பெற்றிருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தார். அதன்பின் சுமார் 27 வருடங்கள் கழித்து தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜேஎன்யு மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற தனஞ்ஜெய் கூறுகையில் "இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் வெறுப்பு அரசியல், வன்முறையை நிராகரித்துள்ளனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் மாணவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

    • டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது
    • தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது.

    இதுதான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. அதில், ஏ.பி.வி.பி வேட்பாளரான உமேஷ் சி அஜ்மீராவை வீழ்த்தி, ஆல் இந்தியா மாணவர்கள் சங்க வேட்பாளர் தனஞ்ஜெயா வெற்றி பெற்றார். 

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலில் இந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் பகுஜன் மாணவர் கூட்டமைப்பு (BSF) கூட்டணி வெற்றி பெற்றது.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.

    பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி சமுதாயக்கல்லூரி, காரைக்கால், அந்தமான், மாகி பகுதியில் உள்ள கல்லூரிகளில் உள்ள 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மாணவர்கள் வாக்களித்தனர்.

    சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ். எப்.ஐ.) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்களை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

     வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்நிலையில் 58 இடங்களில் SFI வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். SFI கூட்டணியில் போட்டியிட்ட BSF வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். காயத்ரி எஸ். குமார் கவுன்சிலில் தலைமையேற்றார்.

    வெற்றி பெற்ற கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பாரதரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கட்டிடத்தின் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர்.
    • அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    நேற்று (புதன்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் (SAU) அசைவம் சாப்பிட்டது தொடர்பாக இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி மாணவர் அமைப்பான SFI (இந்திய மாணவர் கூட்டமைப்பு) மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பான ABVP (பாரதிய வித்யார்த்தி பரிஷத்) உறுப்பினர்கள் இடையே மொதலானது ஏற்பட்டது.

    மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர். மீறி நேற்று அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்ளை ஏபிவிபியின் அடித்ததாக SFI அமைப்பு தெரிவித்தது. இதை எதிர்த்த எஸ்எப்ஐயினருடன் ஏபிவிபியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக SFI வெளியிடுள்ள அறிக்கையில், ஏபிவிபி குண்டர்கள் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களைத் தாக்கினர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, தெற்காசிய பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல் 3.45 மணியளவில் மைதான்கரி காவல் நிலையத்திற்கு மோதல் தொடர்பான அழைப்பு வந்தது. நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.

    மோதல் தொடர்பாக SAU நிர்வாகம் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முறையான புகார் எதுவும் வரவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தால் உள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    மத்தியப் பிரதேசத்தில் பேராசிரியரை காலில் விழ வைத்த ஏ.பி.வி.பி மாணவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #ABVP #RahulGandhi
    போபால் :

    மத்தியப் பிரதேசம் மாநிலம், மன்சாவுர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக வகுப்பறைக்கு வெளியில் கோஷங்களை எழுப்பி கூச்சலிட்டனர்.

    அப்போது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் தினேஷ் குப்தா என்பவர் மாணவர்கள் கோஷங்கள் எழுப்புவதை கண்டித்து கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால், ஆத்திரம் அடைந்த ஏ.பி.வி.பி மாணவர்கள் பேராசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினர். அவ்வாறு புகார் அளிக்காமல் இருக்க வேண்டுமானால் பேராசிரியர் தினேஷ் குப்தா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மிரட்டலுக்கு பணிந்த பேராசிரியர் மாணவர்களின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டார், அதை வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் பரவிட்டதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் மன்னிப்பு கேட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’ஆளும் பாஜக ஆதரவு மாணவர்கள் ஆசிரியரை அவமதித்துள்ளனர். ஆசிரியர்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில், மாணவர்கள் ஆசிரியரை மிரட்டுவதிலும், ஆசிரியர் மாணவர்களின் காலை தொடுவதிலும் இருந்து எவ்வகையான மதிப்பு வெளிப்படுகிறது ?, அறிவுடையவர்கள் செய்யும் செயலா இது ?’ என ராகுல் காந்தி மாணவர்களை கண்டித்துள்ளார். #ABVP #RahulGandhi

    மத்தியபிரதேசத்தில் வகுப்புக்குள் கோ‌ஷம் எழுப்பியதை தடுத்த பேராசிரியரை பாஜக மாணவர் அமைப்பினர் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BJP #MPProfessor
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சார் என்ற இடத்தில் ராஜீவ்காந்தி பட்டமேற்படிப்பு கல்லூரி உள்ளது. இங்கு தினேஷ் சந்திரகுப்தா என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார்.

    அந்த கல்லூரியில் பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியிட தாமதமானது. இதுதொடர்பாக பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுக்க கல்லூரிக்கு வந்தனர்.

    பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தாவை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர். அப்போது வகுப்பறையிலேயே அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

    அதற்கு பேராசிரியர் நீங்கள் கோ‌ஷமிடுவதால் வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே கோ‌ஷமிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    இதனால் கோபம் அடைந்த தொண்டர்கள் பேராசிரியரிடம் தகராறு செய்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பேராசிரியரை தேச துரோகி என்று குற்றம் சாட்டியதுடன் அவர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர் எவ்வளவோ சொல்லியும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் வேறு வழி தெரியாத பேராசிரியர் திடீரென மாணவர்களின் காலை தொட்டு கும்பிட்டார். இதை அந்த அந்த மாணவர்களே எதிர் பார்க்கவில்லை. பேராசிரியர் தங்கள் காலில் விழுந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

    ஆனால் இதை யாரோ செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதன்பிறகு தான் இந்த வி‌ஷயம் வெளி உலகிற்கு தெரியவந்தது.

    இந்த சம்பவத்திற்கு பிறகு பேராசிரியர் விடுமுறை எடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. அதனால் எந்த விசாரணையும் நடக்கவில்லை.

    இதுசம்பந்தமாக கல்லூரி முதல்வர் ரவீந்திரகுமார் சோகானியிடம் கேட்டபோது, பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தா மூத்த பேராசிரியர் ஆவார். 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளார். இதய நோய், ரத்த அழுத்த நோயாளி. அவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை என்று கூறினார்.

    அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் மாவட்ட தலைவர் பவான் சர்மாவிடம் கேட்ட போது, சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இல்லை. நான் அங்கு சென்றபோது ஆசிரியர்களும், எங்கள் மாணவர்களும் விவாதித்து கொண்டிருந்தனர். நான் உடனே அதில் தலையிட்டு பேராசிரியரிடம் மன்னிப்பு கேட்டேன். அந்த பிரச்சனை அதோடு முடிந்து விட்டது. ஆசிரியர்களுக்கு நாங்கள் மிகுந்த மரியாதை அளிப்பவர்கள் என்று கூறினார்.

    2006-ம் ஆண்டு உஜ்ஜைனியில் கல்லூரி பேராசிரியர் சபர்வால் என்பவரை அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் இயக்கத்தினர் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு நாக்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    அதுபோன்று மோசமான சம்பவமாக இதுவும் கருதப்படுகிறது. #BJP #MPProfessor

    Video Courtesy: NDTV

    ×