search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cattle Pongal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.

    தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம்.
    • சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழர் திருநாள் என்று பெருமையோடு அழைக்கப்படும், `பொங்கல்' விழா, தைப் பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி (திங்கட்கிழமை) தைப்பொங்கல், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி (புதன்கிழமை) காணும் பொங்கல் என்று 4 நாட்கள் பெரு விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    தைப் பொங்கல்

    நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. உத்தராயனம் என சொல்லப்படும் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையான 6 மாத காலம், தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை, தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். `உத்தரம்' என்றால் `வடக்கு', `அயனம்' என்றால் `வழி'. சூரியன் சிறிது வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி சிறிது நகர்வதை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம்.

    புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையை பற்றி, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த பொங்கல் விழாவை, `இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனா்.

    சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் அன்று கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள்.

    பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு ஏற்படும் என்றும் சொல்வார்கள். பொங்கல் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்...' என்று கூறி மகிழ்வார்கள்.

    இந்த வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம்:

    காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், மதியம் 12.40 மணி முதல் 1.40 மணிக்குள்.

    • அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
    • கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப் பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண் டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங் கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.

    ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையி லேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    நெல்லையில் டவுன், தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், சீவலப்பேரி சாலை உள்பட அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.

    நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட் டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.

    பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயர வில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும் விற்கப்பட்டது.

    • மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இடுவர்.
    • வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    கடலூர்: 

    தை மாதம் 1-ந் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் விழாவை குடும்பத்துடன் கோலாக லமாக கொண்டாடி னார்கள். இதனை யொட்டி பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் புதிய பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் விழாவை குடும்பத்துடன் ஆனந்தமாக கொண்டாடினார்கள். மேலும் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்ததையும் காணமுடிந்தது.

    இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து கொண்டாடுவார்கள். இதனை தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள வீடுகளில் மாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது. மேலும் வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    இன்று மாட்டுப் பொங்கல் முன்னிட்டு வீடுகளில் உள்ள மாடுகளை காலையில் குளிப்பாட்டி கொம்புகளை தீட்டி புதிய பல்வேறு வண்ணங்களை பூசி மகிழ்வார்கள். பின்னர் மாடுகள் மீது மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை பூசி வீடுகளில் வணங்கி மகிழ்ந்தனர். மேலும் இன்று மாலை வீடுகளில் உள்ள மாடுகளை வண்டிகளில் கட்டி கொம்புக்களில் பலூன், வண்ணக் காகிதங்கள் போன்றவற்றால் அலங்கரித்து ஊர்வலமாக அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் சிறுமிகளை ஏற்றிக் கொண்டு ஆரவாரமாக கத்திக்கொண்டு கோவி லுக்கு சென்று தெருக்களில் ஆரவாரத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள மாடுகளை காலை முதல் ஊழியர்கள் குளிப்பாட்டி சுத்தம் செய்தனர் .பின்னர்கொம்புகளுக்கு வர்ணம் பூசி பலூன்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோமாதா என்று அழைக்க கூடிய மாடுகளை வணங்கி அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி ஆனந்தமாக கொண்டாட உள்ளனர்.

    • கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
    • வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

    அதன்படி இன்றும் மாட்டு சந்தை கூடியது. இன்று பசுமாடு, எருமை மாடு, கன்றுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் கூடி இருந்தனர்.

    வரும் திங்கட்கிழமை மாட்டு பொங்கலையொட்டி இன்று மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி, சாட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறு, கழுத்து கயிறு, மூக்கணாங் கயிறு, கழுத்து மணி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

    கழுத்து மணி சிறியது 20 ரூபாய்க்கும், பெரிய மணி 150 ரூபாய்க்கும், திருகாணி 20 முதல் 50 ரூபாய்க்கும், கழுத்து கட்டி கயிறு 20 முதல் 200 வரைக்கும், சாட்டை 50 முதல் 200 ரூபாய் வரைக்கும், மொளகுச்சி கம்பி 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.

    ×