search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Worship"

    • மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இடுவர்.
    • வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    கடலூர்: 

    தை மாதம் 1-ந் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் விழாவை குடும்பத்துடன் கோலாக லமாக கொண்டாடி னார்கள். இதனை யொட்டி பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் புதிய பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் விழாவை குடும்பத்துடன் ஆனந்தமாக கொண்டாடினார்கள். மேலும் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்ததையும் காணமுடிந்தது.

    இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து கொண்டாடுவார்கள். இதனை தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள வீடுகளில் மாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது. மேலும் வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    இன்று மாட்டுப் பொங்கல் முன்னிட்டு வீடுகளில் உள்ள மாடுகளை காலையில் குளிப்பாட்டி கொம்புகளை தீட்டி புதிய பல்வேறு வண்ணங்களை பூசி மகிழ்வார்கள். பின்னர் மாடுகள் மீது மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை பூசி வீடுகளில் வணங்கி மகிழ்ந்தனர். மேலும் இன்று மாலை வீடுகளில் உள்ள மாடுகளை வண்டிகளில் கட்டி கொம்புக்களில் பலூன், வண்ணக் காகிதங்கள் போன்றவற்றால் அலங்கரித்து ஊர்வலமாக அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் சிறுமிகளை ஏற்றிக் கொண்டு ஆரவாரமாக கத்திக்கொண்டு கோவி லுக்கு சென்று தெருக்களில் ஆரவாரத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள மாடுகளை காலை முதல் ஊழியர்கள் குளிப்பாட்டி சுத்தம் செய்தனர் .பின்னர்கொம்புகளுக்கு வர்ணம் பூசி பலூன்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோமாதா என்று அழைக்க கூடிய மாடுகளை வணங்கி அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி ஆனந்தமாக கொண்டாட உள்ளனர்.

    அரச மரமும், வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் தெய்வமாக வணங்கி வந்த கிராம மக்கள், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டியை சேர்ந்தவர் கைலாசம். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய கைலாசம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு பொதுவான கோம்மைபட்டி மந்தை பகுதியில் அரச மரக்கன்றை நட்டு வைத்து அதை பிள்ளைபோல் நினைத்து வளர்த்து வந்தார்.

    சில நாட்களிலேயே அரச மரக்கன்றின் அருகிலேயே வேப்ப மரக்கன்றும் தாமாகவே வளர்ந்தது. அரச மரமும், வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் கிராம மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வந்தனர். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டிய ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் முருகன் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்த நாளை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், தொடர் மழை பெய்ய வேண்டியும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக மரங்களை பராமரித்து வரும் கைலாசத்திடம் தெரிவித்தனர்.

    இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சமுத்திராப்பட்டி, கோம்பைபட்டி, சம்பபட்டி, பூதகுடி, அம்மாபட்டி, சடையம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு திரண்டு வந்தனர். அரச மரத்துக்கு பட்டு வேட்டியும் வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு நடந்தது. மேலும் இரண்டு மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தீபாராதனையை தொடர்ந்து மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க கிராம மக்கள் புடைசூழ அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் குருக்கள் வேப்ப மரத்திற்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். வினோத திருமணத்துக்கு விருந்தாளிகளாக வந்து இருந்த கிராம மக்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.



    ×