search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the occasion of"

    • கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.
    • இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசும் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 27-ந்தேதி அன்று ஒரு பெரிய அளவிலான "கால்நடை மருத்துவ முகாம்" கால்நடை பராமரிப்புத்துறை,

    ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம்,

    மலடு நீக்க சிகிச்சைகள், தாது உப்புக்கலவைகள் வழங்குதல், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள்,

    நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.

    மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மூலம் நடைமுறை படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்களிடமிருந்து பதில் பெறலாம்.

    இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 விவசாயிகளுக்கு விருதுகளும், கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் 27-ந்தேதி அன்று ஈரோடு ஒன்றியம், என்.தயிர்பாளையம் கிராமத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
    • வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 74 -வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை தீவரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு பஸ் நிலையம், ஜி. எச். ரவுண்டானா, கருங்கல்பாளையம், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகர் பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையம் நுழைவாயிலில் பயணிகள் உடமைகள் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பயணிகள் உடமை பரிசோதிக்கப்படுகிறது.

    சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் பெயர், முகவரி, செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர்.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ெரயில்களையும் ெரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களில் கேட்பாராற்று கிடக்கும் பொருட்கள் இருந்தால் அதனை தொட வேண்டாம். அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நாளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசார் அலுவலர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து தியாகிகளை கவுரவப்படுத்துகிறார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.

    • கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
    • வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

    அதன்படி இன்றும் மாட்டு சந்தை கூடியது. இன்று பசுமாடு, எருமை மாடு, கன்றுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் கூடி இருந்தனர்.

    வரும் திங்கட்கிழமை மாட்டு பொங்கலையொட்டி இன்று மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி, சாட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறு, கழுத்து கயிறு, மூக்கணாங் கயிறு, கழுத்து மணி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

    கழுத்து மணி சிறியது 20 ரூபாய்க்கும், பெரிய மணி 150 ரூபாய்க்கும், திருகாணி 20 முதல் 50 ரூபாய்க்கும், கழுத்து கட்டி கயிறு 20 முதல் 200 வரைக்கும், சாட்டை 50 முதல் 200 ரூபாய் வரைக்கும், மொளகுச்சி கம்பி 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.

    ×