search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republic Day celebrations"

    • குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
    • வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 74 -வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை தீவரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு பஸ் நிலையம், ஜி. எச். ரவுண்டானா, கருங்கல்பாளையம், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகர் பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையம் நுழைவாயிலில் பயணிகள் உடமைகள் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பயணிகள் உடமை பரிசோதிக்கப்படுகிறது.

    சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் பெயர், முகவரி, செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர்.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ெரயில்களையும் ெரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களில் கேட்பாராற்று கிடக்கும் பொருட்கள் இருந்தால் அதனை தொட வேண்டாம். அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நாளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசார் அலுவலர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து தியாகிகளை கவுரவப்படுத்துகிறார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.

    • கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது
    • பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கத்தை அணிவிக்கிறார். மேலும் சிறப்பாக பணியாற்றி யஅரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்துகிறார்.

    பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

    குடியரசு தின விழாவை நடைபெறும் வ.உ.சி. மைதானம் நாளை மறுதினம் முதல் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளும் பணியினை தொடங்குவார்கள்.

    மேலும் மாநகரில் குடியரசு தின நாளன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

    இதேபோல கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.  

    ×