search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "al qaeda"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாஷிங்டன்:

    அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பால்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

    அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது.

    இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம். இலக்கின் மேலே பறந்து செல்லும்.

    லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்தது 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும். ஏவுகணை வெடிக்காது.

    இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார். முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

    சிரியாவில் அல்-கொய்தா கமாண்டர் அபு அல்-கைர் அல்-மஸ்ரி காரில் சென்றபோது அந்த விமானம் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்பட வில்லை.

    அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அது அல்-ஜவாஹிரி தானா என்பதை உறுதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டனர். அல்-ஜவாஹிரி தனது வீட்டு பால்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கேன் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.
    • ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.

    அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.

    இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.

    இதனால் ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி ஆளில்லா விமானம் இயக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் டிரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-ஜவாஹிரி, பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அவர் வசித்த பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ளது.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதற்காக நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிதியை பெற முயற்சித்து வருகிறது.

    இதற்கிடையே அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தான் அதற்கு சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் தகவல்கள் அளித்து இருக்கிறது. இதுகுறித்து சில நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவிடம் நட்புறவை பெறவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது என்றனர்.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
    • அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல் கொய்தா இயக்க தலைவன் கொல்லப்பட்டான்.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கி இருந்த அல்-கொய்தா இயக்கத்தின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டான்.

    அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் அய்மான் அல்-ஜவாரி என்பதும், அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இன்று அறிவித்தார்.

    அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கி பிரிட்டன் நாட்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். #alqaeda #alqaedaplan #blowupairports #blowupairliners #UKminister #BenWallace
    லண்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது 11-9-2001 அன்று விமானங்களை மோதவிட்டு அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மோதிய நான்கு விமானங்களில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். 

    இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் தீப்பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. 

    இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இதற்கு பழிக்குப்பழியாய் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    அவரை கொன்ற பின்னர் அல் கொய்தாவின் ஆதிக்கம் அழிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், முன்னர் பலமிழந்தும் உதிரிகளாகவும் இருந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டுன் பலம்பெற்று மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் நாட்டு உள்துறை மந்திரி பென் வேல்லஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    குறிப்பாக, பிரிட்டன் நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களை தாக்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    நவீன ஆயுதங்கள் மூலம் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் தொழில்நுட்பத்தில் அவர்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய யுக்திகள் மற்றும் முறைகளை பயன்படுத்தி ஐரோப்பிய கண்டத்தில் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் தயாரிப்பில் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிநவீன ரசாயனங்கள் மூலம் நடத்தப்படவுள்ள இந்த தாக்குதல்களில் இருந்து விமானங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து தடுப்பு நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்காக பிரிட்டன் அரசு இதுவரை இரண்டரை கோடி பவுண்டுகளை செலவிட்டுள்ளது எனவும் அந்த பேட்டியில் பென் வேல்லஸ் தெரிவித்துள்ளார். #alqaeda #alqaedaplan #blowupairports #blowupairliners #UKminister #BenWallace 
    பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சவுதி அரேபிய இளவரசருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman

    துபாய்:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

    பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

    சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் பொழுதுபோக்கு நகரம் ஒன்றையும் உருவாக்க இருக்கிறார். இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
     
    இந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார். அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman
    சவுதி அரேபியாவில் திரையரங்கத்தை திறந்தது மற்றும் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்த நடவடிக்கைக்காக பட்டத்து இளவரசர் பின் சல்மானுக்கு அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. #AlQaeda #MohammedbinSalman
    ரியாத்:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். வரலாற்றில் முதன் முறையாக திரையரங்கத்தை திறந்து வைத்து சவுதியில் அதிகளவில் பொழுதுபோக்கு நிகழ்சிகளை நடத்த வழிவகை செய்தார்.

    பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை நீக்கி சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இந்த திட்டங்கள் எல்லாம் பாவகரமான திட்டங்கள் எனக் கூறியுள்ள அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

    ‘முகமது பின் சல்மான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கு பதிலாக, காரணமே இல்லாமல் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நாத்திகம் மற்றும் மதச்சார்பற்றவர்களை பின்தொடர்வதால், சவுதியில் ஊழல் மற்றும் அறத்தை சிதைக்கும் போக்கு அதிகரித்துள்ளது’ என அல் கொய்தா அமைப்பின் செய்தி நிறுவனமான மதாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ‘கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு அருகில் உள்ள ஜெட்டா நகரில் ராயல் ரம்பல்(WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகள் நடந்தது. இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் மல்யுத்த வீரர்கள் திறந்த உடலுடன் இருந்தது கடும் கண்டனத்துக்குரியது’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AlQaeda #MohammedbinSalman
    ×