search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conspiracy"

    • மும்பை ரெயிலை விபத்தில் சிக்கவைக்க சதி:
    • அரியலூர் அருகே ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு
    • போலீசார் முகாமிட்டு விசாரணை

    அரியலூர்,

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரியலூர் அருகே பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி ெகாண்டிருந்தது. இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.

    சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடம் காட்டுப்பகுதி என்பதால் அந்த வழியாக மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று போலீசர அந்த பகுதியில் முகமைட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • இன்று அதிகாலை கட்டிட வேலைகள் நடைபெறும் வணிக வளாகத்தின் முன்பிருந்து புகைமூட்டம் எழுந்தது.
    • மரப்பலகையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் அணைத்தனர்.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் அருகே மாநகராட்சி மேயரின் பழைய பங்களா இருந்தது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக சென்ட்ரிங் அமைப்பதற்காக ஏராளமான மரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிட வேலைகள் நடைபெறும் வணிக வளாகத்தின் முன்பிருந்து புகைமூட்டம் எழுந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய வீரர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்ட மரப்பலகையில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மரப்பலகையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? மர்மநபர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறையில் ரவுடியை சந்தித்து பா.ஜ.க. நிர்வாகி சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது
    • திரைப்பட இயக்குனர் கொலையில் கைதான பா.ஜ.க. நிர்வாகி பற்றி பரபரப்பு தகவல்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடி பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ந் தேதி மாலை தனது பிறந்த நாள் மற்றும் திருமண விழாவையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலின் மதுபான பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடினார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு மேட்டு தெருவை சேர்ந்த அபினாஷ் (22), திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, வடமலை சந்துவை சேர்ந்த நவீன் (20), நவல்பட்டு பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), அவரது மனைவி ரமணி (34), பெரம்பலூர் அருகே செஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி தரப்புக்கும், கொலையான அப்துல் ரகுமானுக்கும் கட்ட பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழக்கில் கைதாகி அழகிரி தற்போது சிறையில் உள்ளதால், அப்துல்ரகுமான் கட்ட பஞ்சாயத்தில் அதிகளவில் ஈடுபட்டதால் அழகிரி தரப்புக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் அழகிரிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வாக்கு குறைந்து வந்ததாம். இதனால் சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கூட்டாளிகளை வைத்து அப்துல் ரகுமானை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான ரமணி அழகிரியின் தங்கை ஆவார்.இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்த பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவரும், பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா துணை தலைவருமான ஜெயபாலாஜி (வயது 43) முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடியானது. இதையடுத்து ஜெயபாலாஜியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.போலீஸ் விசாரணையில் திரைப்பட இயக்குனர் செல்வராஜ் கொலைக்கு ஜெயபாலாஜி சதி திட்டம் தீட்டியது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.பா.ஜ.க. பிரமுகரான ஜெயபாலாஜிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிறையில் உள்ள ரவுடி அழகிரியுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு ெ காண்டு பேசிவந்த ஜெயபாலாஜிக்கு சிறைக்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். இதுவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தெடர்ந்தே அவரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • அதிவேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சைக்கிளை வீசி சென்ற மர்ம நபர்
    • சதி செயலா? என விசாரணை

    திருச்சி, 

    சென்னை - மங்களூரூ எக்ஸ்பிரஸ் ரெயில் விருதாச்சலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர், சைக்கிளுடன் ரயில் பாதையை கடக்க வந்தார். வேகமாக வந்த ரயிலை கண்ட அந்த மர்ம நபர், தனது சைக்கிளை ரயில் பாதையில் போட்டு விட்டு தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சைக்கிள் சின்னா பின்னமானது. ரயில் இன்ஜினுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் இன்ஜினில் சைக்கிள் சிக்கியதை கண்டு லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். பின்னர் அவர் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அங்கிருந்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அங்கு வந்த ஆர்பிஎப் வீரர்கள் சைக்கிளை அகற்றினர். சைக்கிள் முற்றிலுமாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் ரயில் என்ஜினை சோதித்தனர். சேதம் எதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், ரயில் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 21 நிமிடங்கள் ரயில் தாமதத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இது சதிச்செயலா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்பது குறித்து ஆர்பிஎப், ரயில்வே போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடி வந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், அதே ரயில் லால்குடி ஸ்டேஷன் அருகே வந்தபோது 10 மற்றும் 12-வது பெட்டியில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து ரயில் லோகோ பைலட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து ரயில் ஸ்ரீரங்கம் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 41 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. பின்னர் திருச்சி ஜங்ஷனில் சைக்கிள் மோதிய இரண்டாவது கோச் நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 70 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சைக்கிள் மீது ரயில் மோதிய விவகாரம் தொட ர்பாக விழுப்புரம் ரயில்வே போலீசார் ரயில்வே சட்டம் 147, 154 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மூவலூர் தேரடி வீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

    தி.மு.க. வை விட்டு விலகிச் சென்றவர்கள் அனைவரும் தற்போது வைகோ, வந்தது போல மீண்டும் தி.மு.க.விடமே வந்து சேர்வார்கள். அ.தி.மு.க. இரண்டு தலைமைகள் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இது நிலைத்து இருக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. சிதறி சின்னா பின்னமாகிவிடும்.

    தி.மு.க. வில் 2-வது தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    சினிமாவில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று பேசுகிற ரஜினி நிஜத்தில் தனது உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லி மக்களை குழப்புகிறார்.

    தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தமிழகத்திலேயே ஓடும் ரெயிலுக்கு ‘அந்த்யோதயா’ என்ற இந்தி பெயரை வைத்துள்ளனர். அந்த ரெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடியை காட்டி தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை இந்தியை திணிக்க முடியாது.

    தற்போது தமிழை மறக்கடிக்க வெளி மாநிலங்களில் இருந்து ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க இன்னும் 250 ஆண்டுகளாவது ஆகும். எதனையும் எதிர்க்க தயாராக தி.மு.க. தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    நீட் தேர்வை தமிழக மாணவர்கள் கேரளாவில் சென்று எழுதினால் என்ன தவறு? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வர இருக்கிற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்திலும், தமிழிசை வெளிமாநிலத்திலும் நின்று ஜெயிக்க முடியுமா?

    இவ்வாறு ராதாரவி பேசினார். #DMK #RadhaRavi #ADMK #BJP
    ×