என் மலர்
நீங்கள் தேடியது "Mossad"
- காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின.
- இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.
2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வுக்கும் இஸ்ரேலின் மொசாத்-திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்பியான குமார் கேத்கர் பிரபல பத்திரிகையாளரும் ஆவார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "2004 மக்களவை தேர்தலில் கட்சி 145 இடங்களையும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்திருந்தால், காங்கிரசால் 250 இடங்களைப் பெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், 2014-ல் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.
காங்கிரசைப் பலவீனப்படுத்த 2014 தேர்தலுக்கு முன்பே சதி வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2009-ல் கிடைத்த இடங்களைவிடக் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைய சில அமைப்புகள் தலையிட்டன.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த நிறுவனங்கள் நம்பின. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க சி.ஐ.ஏ-வும் மொசாத்தும் முடிவு செய்தன.
இந்த அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.
மத்தியில் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின" என்று தெரிவித்தார்.
- மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
- இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்
ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஐந்து நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகம் உட்பட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, அதிகாலை வேளையில் IRGC வெற்றிகரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் அமன் தலைமையகத்தையும், மொசாட்டின் படுகொலை நடவடிக்கைகளை திட்டமிடும் மையத்தையும் குறிப்பாக குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக் "இன்றைய(ஜூன் 17) தாக்குதலில், கண்காணிக்கவோ அல்லது இடைமறிக்கவோ முடியாத ஏவுகணைகளை நாங்கள் பயன்படுத்தினோம்" என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, இஸ்ரேல், ஈரான் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷாட்மானியை தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றதாக அறிவித்தது. அலி ஷாட்மானி நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பதவியை ஏற்றிருந்தார். அவருக்கு முன் கொல்லப்பட்ட கோலம் அலி ரஷீத்துக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கு ஈரானில் தங்கள் விமானப்படை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், சில ஏவுகணைகள் ஹெர்சிலியா உள்ளிட்ட நாட்டின் மத்திய பகுதிகளில் விழுந்து லேசான காயங்களை ஏற்படுத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த ஈரானியத் தாக்குதலில் சுமார் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்தன.
இஸ்ரேலின் வெள்ளிக்கிழமை தொடங்கிய திடீர் தாக்குதல்களால் போர் மூலம் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பரஸ்பர வான்வழி தாக்குதல்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
- ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
- பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஈரான் நேற்று தூக்கிலிட்டது.
இஸ்மாயில் ஃபெக்ரி என்ற அந்த நபர், ஈரானிய பாதுகாப்பு முகமைகளால் டிசம்பர் 2023 இல் கைது செய்யப்பட்டார். ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இம்மாதிரியான உளவு வழக்குகளின் விவரங்கள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை. எனினும், ஃபெக்ரி பணத்திற்காக ஈரானின் ரகசிய தகவல்களை மொசாட்டிற்கு அனுப்ப முயன்றதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மே மாத இறுதியில், பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.
இந்த நிகழ்வுகள், ஈரான் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்கு இடையேயான தீவிரமான மற்றும் இரகசிய மோதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
- அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார்.
- ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் ஜூலி வவிலோவா
பாவெல் துரோவ்
உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் அதன் இணை நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து மறைகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்த்துள்ளனர். அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார். இவர் பாவெல் துரோவின் காதலி என்று கூறப்படுகிறது. பாவெல் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் வந்த ஜூலி எங்கு போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜூலி வவிலோவா மூலமே பாவெல் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜூலி வவிலோவா
24 வயதாகும் ஜூலி வவிலோவா கிரிப்டோ வணிக பயிற்சியாளராகவும், வீடியோ கேம் ஸ்ட்ரீமராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , அஜர்பைஜான் என பல்வேறு நாடுகளுக்கு பாவெலுடன் பயணம் செய்ததை தொடர்ச்சியாக தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதுவே பாவெலின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணித்து பிரான்ஸ் எல்லைக்குள் வரும்போது அவரை கைது செய்ய போலீசாருக்கு முக்கிய உதவியாக இருந்தது என்று பலர் கருதுகின்றனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அஜர்பைஜானில் பாவெலுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஜூலி பகிர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
காதலியா? உளவாளியா?
ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய ஜூலி வவிலோவா இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அமைப்பை சேர்நதவர் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன. ஜூலி - பாவெல் உணைமயிலேயே காதலர்களா என்று உறுதி செய்யப்படாத நிலையில் டெலிகிராம் தலைமயகம் உள்ள துபாயிலேயே அவர்கள் இருவரும் வசித்து வந்தனர் என்ற மேம்போக்கான தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜூலி வவிலோவாவின் சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருகின்றன.
- இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
- இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை தடுமாறிய ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் கமாண்டர் இறந்தாலும் அதனால் தங்களின் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழியும் என்று எண்ணிவிடக்கூடாது என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடதத் தொடங்கியுள்ள ஹிஸ்புல்லா இதுவரை வடக்கு இஸ்ரேல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பேலிஸ்ட்டிக் தாக்குதலை ஆன்டி- பேலிஸ்டிக் மிசைல்கள் மூலம் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரின் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த பேஜர் தாக்குதல்களுக்கும் தங்களது தளபதிகளைக் குறிவைத்துக் கொன்றதற்கும் மோசாட்டை [பழிதீர்க்க இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் தலைநகர் டெல் அவிவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

- அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி.
- மொசாட் உளவாளிகள் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
ஈரான் புலனாய்வு அமைப்புகளில் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியதாக ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் அகமதிநெஜத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான நேர்காணலில் அவர், "ஈரான் ரகசிய அமைப்பின் தலைவர் உண்மையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகமையான மொசாட்-இன் ரகசிய உளவாளி," என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் நடவடிக்கைகளை உளவு பார்க்க நிமயகமிக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை மொசாட் பயன்படுத்திக் கொண்டது என்று ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் தெரிவித்தார். இதன் மூலம் ஈரானை சேர்ந்த கிட்டத்தட்ட 20 உளவாளிகள் இஸ்ரேலுக்கு மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர். ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரானை இஸ்ரேல் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது முதல் முறையில்லை. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஈரானின் மிக முக்கிய அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் உளவாளிகள் சேகரித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணங்களில், மொசாட் உளவாளிகள் தெஹ்ரானி வேர்ஹவுசுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையில், கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சுமார் ஆறு மணி நேரம் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டது. இந்த ஆவணங்களால் ஈரானின் அணு ஆயுத திட்டம் உலக அரசியலில் புயலை கிளப்பியது.






