என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavel Durov"

    • பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும்.
    • போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் F-35B போர் விமானம், கடந்த ஆறு நாட்களாக இந்தியாவில் உள்ளது.

    அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படும் இந்த ஜெட் விமானம், ஹேங்கரில் (விமான நிறுத்துமிடத்தில்) நிறுத்தப்படவில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமானம் தற்போது வெளியில் இருப்பதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    பிரிட்டிஷ் கடற்படை விமானத்தை தங்கள் ஹேங்கரில் வைத்திருக்க ஏர் இந்தியா முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    இருப்பினும், பிரிட்டிஷ் கடற்படை இந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்துள்ளது. பிரிட்டிஷ் கடற்படை அதன் தனித்துவமான அதிநவீன தொழில்நுட்பம் யாருடைய கைகளிலும் சிக்குவதை விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

    இருப்பினும், இறுதி ஆய்வுகளின் போது விமானத்தை ஹேங்கருக்கு நகர்த்தவும் அவர்கள் ஒப்புக்கொள்ளலாம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது. வேறு எந்த போர் விமானத்திலும் காணப்படாத மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை இது கொண்டுள்ளது.

    இந்த விமானம் பிரிட்டனின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் வந்தடைந்தது. F35B சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கடற்படை பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது.

    ஜூன் 14 அன்று, போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் குறைந்த எரிபொருள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், விமானி கேரளாவில் தரையிறங்க வேண்டியிருந்தது. இந்திய விமானப்படை மறுநாள் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அப்போதிருந்து, அது வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டிஷ் நிபுணர்களும் விமானியும் கடுமையாக முயன்று வருகின்றனர். மறுபுறம், விமானத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    • அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.
    • பாவெல் துரோவின் நிகர மதிப்பு 13.9 பில்லியன் டாலர் முதல் 17.1 டாலர் பில்லியன் வரை உள்ளது.

    பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்றும் இளமையாக இருக்க அவர் எடுத்துக்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளுக்கு பாவெல் பிரபலமானவர். ரஷிய நாட்டவரான இவர் துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே தனது விந்தணு தானத்தின் மூலம் உலகம் முழுவதும் 12 நாடுகளில் 100 பேர் பிறந்ததாக பரபரப்பான அறிவிப்பை சில காலம் முன் அவர் வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் தனது சொத்துக்கள் தனது அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிப்பதாக பாவெல் அறிவித்துள்ளார். இதற்காக சமீபத்தில் ஒரு உயில் எழுதியுள்ளதாகவும் பாவெல் கூறினார். பாவெல் வெளிப்படுத்திய விவரங்களின்படி, அவர் திருமணமாகவில்லை என்றாலும், அவர் மூன்று பெண்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த ஆறு பேரைத் தவிர, விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கும் அவர் தந்தையானார். அனைவரும் தனக்கு சமம் என்றும், யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    அதனால்தான் அவர்கள் அனைவருக்கும் தனது சொத்தில் சம பங்கு இருக்கும் என்று பாவெல் கூறினார். தனது வாழ்க்கை சவால்களால் நிறைந்தது என்று கூறும் 40 வயதான பாவெல் தனது உயிலை எழுதியுள்ளார்.

    இருப்பினும், பாவெலின் முழு சொத்தும் ஒரே இரவில் அவரது குழந்தைகளுக்குச் செல்லாது என்றும் வாழ்க்கையில் அவர்கள் பட்டறிவு பெறவேண்டும் என்பதால் உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொத்து குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார். அதாவது அவரது சொத்துக்கள் 2055, ஜூன் 19 அன்று அவரது 106 குழந்தைகளுக்கு பிரிந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் மற்றும் ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, பாவெல் துரோவின் நிகர சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலர் முதல் 17.1 டாலர் பில்லியன் வரை உள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, இது ஒரு குழந்தைக்கு சுமார் 131 மில்லியன் டாலர் முதல் 161 மில்லியன் டாலர் வரை பரம்பரைச் சொத்தாக மாறும். 

    • 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    • அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் என்னக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

    பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் Pavel Durov] அதன் தலைமை அதிகாரியாகவும் [சிஇஓ] உள்ளார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் பாவெல் துரோவ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 12 வெவ்வேறு நாடுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

     

     

    15 வருடங்கள் முன்பு தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்த நிலையில் அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க தனது விந்தணுவை முதல் முறையாக தானம் செய்த பாவெல் துரோவ் அன்றுதொட்டு தொடர்ந்து தனது விந்தணுக்களை தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

    'முதல்முறையாக விந்தணுக்களை தயக்கத்துடனேயே தானம் செய்தேன். ஆனால் அப்போது மருத்துவர்கள் என்னிடம் தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் விந்தணு தானம் செய்வது சமூக கடமையாகும் என்று தெரிவித்தனர். அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் எனக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

     

    'இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன். இன்னும் வருங்காலங்களில் IVF கிளினிக்கில் உறையவைக்கபட்டு பாதுகாப்பட்டுள்ள எனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும்' என்றும் பாவெல் பெருமையுடன் கூறுகிறார். மேலும் இதுபோன்று பலரும் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
    • கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துபாயை தலைமையிடமாக கொண்டு உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், 'ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் வகுத்த விதிகளின்படியே டெலிகிராம் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் சிஇஓ பாவெல் துரோவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர் அடிக்கடி ஐரோப்பா சென்று வருபவர், தளத்தைத் தனி நபர்கள் தவறாக பயனப்டுத்துவற்காக அந்த தளத்தையோ நிறுவனத்தின் தலைவரையோ குற்றம் கூறுவது என்பது அபத்தமானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாவெல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பாவெல் துரோவின் கைதை கண்டித்து உலகம் முழுவதிலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

     

    • அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம்
    • நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தியும், பாவெல் துரோவின் கைதை கண்டித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

     

    பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவையும் சிலரால் தவறாக பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆனால் அதற்காக மார்க் ஸுகேர்பேர்கையோ எலான் மஸ்க்கையோ யாரும் கைது செய்யப் போவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ரஷியர் என்ற காரணத்தால் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.

     

    இந்நிலையில் பாவெல் துரோவின் கைது அரசியல் ரீதியிலானது அல்ல என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பாவெல் துரோவின் கைது குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் பரவுவதை நான் கவனித்தேன், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நீதித்துறையின் கையில் தற்போது உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தான் முடிவெடுக்க முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது.
    • இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விசாரணையை மத்திய அரசு தொடங்கிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவதை அமைச்சகங்கள் குறிப்பாக கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார். இதுவரை, டெலிகிராம் விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

    • அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார்.
    • ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் ஜூலி வவிலோவா

    பாவெல் துரோவ்  

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் அதன் இணை நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து மறைகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்த்துள்ளனர். அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார். இவர் பாவெல் துரோவின் காதலி என்று கூறப்படுகிறது. பாவெல் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் வந்த ஜூலி எங்கு போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜூலி வவிலோவா மூலமே பாவெல் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

     

     

    ஜூலி வவிலோவா 

    24 வயதாகும் ஜூலி வவிலோவா கிரிப்டோ வணிக பயிற்சியாளராகவும், வீடியோ கேம் ஸ்ட்ரீமராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , அஜர்பைஜான் என பல்வேறு நாடுகளுக்கு பாவெலுடன் பயணம் செய்ததை தொடர்ச்சியாக தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

    இதுவே பாவெலின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணித்து பிரான்ஸ் எல்லைக்குள் வரும்போது அவரை கைது செய்ய போலீசாருக்கு முக்கிய உதவியாக இருந்தது என்று பலர் கருதுகின்றனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அஜர்பைஜானில் பாவெலுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஜூலி பகிர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

    காதலியா? உளவாளியா? 

    ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய ஜூலி வவிலோவா இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அமைப்பை சேர்நதவர் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன. ஜூலி - பாவெல் உணைமயிலேயே காதலர்களா என்று உறுதி செய்யப்படாத நிலையில் டெலிகிராம் தலைமயகம் உள்ள துபாயிலேயே அவர்கள் இருவரும் வசித்து வந்தனர் என்ற மேம்போக்கான தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜூலி வவிலோவாவின் சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருகின்றன. 

    • கடந்த 24-ந்தேதி பிரான்சில் கைது செய்தனர்.
    • பாவெல் துரோவிற்கு நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது.

    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவை கடந்த 24-ந்தேதி பிரான்சில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    5 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.46 கோடி) பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும் அவர் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும். பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 2 முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×