என் மலர்
நீங்கள் தேடியது "கடற்படை"
- ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பான வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
- 2024-ல் குஜராத்தின் சர் க்ரீக்கில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.
அந்த வகையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பான வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2014-ல் லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பிரதேசத்துக்கு சென்ற அவர், அங்கு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்.
2015-ல், 1965-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் நமது வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள டோக்ராய் போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாடத்தில் பிரதமர் பங்கேற்றார். 2024-ல் குஜராத்தின் சர் க்ரீக்கில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
- போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஜூன் 14 திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது.
- இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும்.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 38 நாட்களுக்குப் பிறகு இறுதியாக நாடு திரும்பியது.
போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஜூன் 14 திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டது.
இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.
இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
- இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர்.
- 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 37 நாட்களுக்குப் பிறகு இறுதியாக நாடு திரும்புகிறது.
பழுதுபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் விமானம் ஹேங்கரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, (இன்று) செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு புறப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.
இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
- பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது.
- எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன F-35B ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக ஹேங்கருக்கு மாற்றப்பட்டது.
ஒரு டோவிங் வாகனத்தில் விமானம் ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் திருவனநாதபுர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போதிருந்து, பிரிட்டிஷ் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை சரிசெய்ய முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் மற்றொரு பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது. விமானத்தை இங்கு பழுதுபார்ப்பது சாத்தியமா அல்லது அதை பிரித்து C-17 குளோப்மாஸ்டர் ராணுவ போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்த்து எடுத்துச் செல்ல வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.
110 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஜெட் விமானம், எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கசிந்தால், இராணுவ ரகசியங்கள் அம்பலமாகும் என்றும் ஆபத்து ஏற்படும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
- C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.
- இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதை சரிசெய்ய பிரிட்டனைச் சேர்ந்த 40 பொறியாளர்கள் கொண்ட குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டு வாரங்களாக சிக்கலைத் தீர்க்க முடியாததால், விமானத்தை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்புவதே சிறந்தது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, போர் விமானம் C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.
இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே. இதனால் விமானத்தை நேரடியாக உள்ளே ஏற்றுவது சாத்தியமில்லை. எனவே, அதன் இறக்கைகளைப் பிரித்து விமானத்தை பாகங்களாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தின் இறக்கைகளைப் பிரிப்பது மிகவும் சிக்கலான செயல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இவ்வாறு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் F-35 விமானங்களின் இறக்கைகள் இதேபோன்ற முறையில் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த செயல்முறை ஒரு சில நாட்களில் முடிக்கப்பட்டு, விமானம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும்.
- போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் F-35B போர் விமானம், கடந்த ஆறு நாட்களாக இந்தியாவில் உள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படும் இந்த ஜெட் விமானம், ஹேங்கரில் (விமான நிறுத்துமிடத்தில்) நிறுத்தப்படவில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமானம் தற்போது வெளியில் இருப்பதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
பிரிட்டிஷ் கடற்படை விமானத்தை தங்கள் ஹேங்கரில் வைத்திருக்க ஏர் இந்தியா முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பிரிட்டிஷ் கடற்படை இந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்துள்ளது. பிரிட்டிஷ் கடற்படை அதன் தனித்துவமான அதிநவீன தொழில்நுட்பம் யாருடைய கைகளிலும் சிக்குவதை விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
இருப்பினும், இறுதி ஆய்வுகளின் போது விமானத்தை ஹேங்கருக்கு நகர்த்தவும் அவர்கள் ஒப்புக்கொள்ளலாம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது. வேறு எந்த போர் விமானத்திலும் காணப்படாத மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை இது கொண்டுள்ளது.
இந்த விமானம் பிரிட்டனின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் வந்தடைந்தது. F35B சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கடற்படை பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது.
ஜூன் 14 அன்று, போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் குறைந்த எரிபொருள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், விமானி கேரளாவில் தரையிறங்க வேண்டியிருந்தது. இந்திய விமானப்படை மறுநாள் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அப்போதிருந்து, அது வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டிஷ் நிபுணர்களும் விமானியும் கடுமையாக முயன்று வருகின்றனர். மறுபுறம், விமானத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
- ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.
இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் வாங்கிய நிலையில் தற்போது ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது.
தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
- ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு நாடுகளும் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இந்நிலையில் இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் இந்த பயிற்சியும், ஒத்திகையும் நடந்துள்ளது. இந்த பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதற்காக அரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ரபேல் விமானங்கள் தரை இலக்குகளை துல்லியமாக தாக்குவது உள்ளிட்ட சிக்கலான பணிகளை கச்சிதமாக செய்து முடிப்பவை ஆகும். ஆனால் இது வழக்கமான பயிற்சிதான் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை சோதனை நடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக் கூடிய திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை கூறியதாவது, 'ஏவுகணைகளை அழிக்கக்கூடிய திறன்கொண்ட உள்நாட்டு வழிகாட்டப்பட்ட ஐ.என்.எஸ். சூரத் எனும் போர்க்கப்பலானது தனது இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது கடற்படையின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
- ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
- பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.
- ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.
- கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
புதுடெல்லி:
வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி பான்வான் கேங்க் 2 நாள் பயணமாக கடந்த 18-ந்தேதி இந்தியா வந்தார்.
அவர் நேற்று புதுடெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது.
குறிப்பாக பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பேசப்பட்டது.
அப்போது பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், 'கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் சென்ற போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கூட்டு தொலை நோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது.
இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும், அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்தின் பாதையை அமைக்கும் என நம்புகிறேன்' என்றார்.
இதைத்தொடர்ந்து இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வியட்நாமின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணையான ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணையை இந்தியா வியட்நாமுக்கு பரிசாக வழங்குவதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இந்த ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஏவுகணையை ஏந்தி செல்லும் ரோந்து கப்பலான ஐ.என்.எஸ். கிர்பான் 1,350 டன் எடை உள்ள குக்ரி வகை ஏவுகணை கார்வெட் ஆகும்.
இது கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது 91 மீட்டர் நீளம், 11 மீட்டர் கற்றை மற்றும் வேக திறன் கொண்டது.
கடலோர பாதுகாப்புக்கும், கடலில் ரோந்து செல்வதற்கும், கடல் கொள்ளை எதிர்ப்பு பணியிலும் இந்த கப்பல் மிகவும் உதவியாக இருக்கும்.
- எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.
- நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.
ஆனால் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22-ந்தேதி புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நெடுந் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை வலியுறுத்தி மண்டபம் பகுதியில் உள்ள கோவில்வாடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக மண்டபம் இறங்குபிடி தளத்தில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-
கடந்த 22-ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் பின்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






